25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Feb 21, 2025

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி .

 கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது.50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் ஆப்கானிஸ் தான் அணி 208ரன்னில் அடங் கியது. இதனால் தென்ஆப்பி ரிக்க அணி 107 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. ஆப்பிரிக்க வீரர் ரையான் ரிக் கெல்டன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அணிகள், மோதுகின்றன. நாளை இந்தியா, பாகிஸ்தான் அணிகள், துபாயில் மோதுகின்றனர்.   

Feb 21, 2025

இந்தியா ஆசிய கோப்பை வில்வித்தையில் அதிக புள்ளி எடுத்து உலக சாதனை படைத்தது.

தாய்லாந்தில் ஆசிய கோப்பை வில்வித்தை 'ரேங்கிங்' தொடர் (21 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகு திச்சுற்று நடந்தது. இந்தியாவின் குஷால் தலால் (712 புள்ளி), கணேஷ் மணிரத்னம் (711), மானவ் கணேஷ்ராவ் (706) இணைந்து மொத்தம் 2129 புள்ளி எடுத்து, புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன், இதே கூட்டணி, 2024ல்  2111 புள்ளிஎடுத்திருந்தது. தொடர்ந்து அணிகளுக்கான பிரிவில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியது.இந்திய 5-3 என்ற அணி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்கு  முன்னேறியது.'ரிகர்வ்' கலப்பு அணிகளுக்கான பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் பசந்தி, விஷ்ணு ஜோடி, மலேசியாவின் ஹரிஸ்யா, ஈவன்ரிச் ஜோடியை சந்தித்தது. போட்டி 4-4 என சமனில் முடிய, இந்திய அணி 'ஷூட் ஆப்' முறையில் 19-17 பெற்று, என வெற்றி பைனலுக்கு முன்னேறியது.'ரிகர்வ்' அணிகளுக்கான ஆண்கள் அரை யிறுதியில் இந்தியாவின் விஷ்ணு, கோல்டி, ராகுல் ஜோடி வெற்றி பெற்றது. 

Feb 20, 2025

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது.

 வங்காளதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.  இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றிபெற்றது.  சுப்மன் கில் 101 ரன்னுடனும் (129 பந்து, 9 பவுண்டரி, சிக்சர்), லோகேஷ் ராகுல் 41 ரன்னுட னும் (47 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இதே மைதானத் தில் நாளை மறுதினம் (ஞாயிற் றுக்கிழமை) பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது

Feb 20, 2025

விளையாட்டு போட்டிகள் 21st february

மாற்றுத்திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.11 பிரிவில் அரியானா வீரர் அன்குர் தமா 18 நிமிடம் 22.29 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். வட்டு எறிதலில் எப்.55 பிரிவில் தமிழகவீரர் முத்துராஜா (36.20 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கானஈட்டி எறிதலில் எப்.53 பிரிவில் அரியானா வீராங்கனை காஞ்சன் லகானியும் (8.39 மீட் டர்), எப்.54 பிரிவில் தமிழக வீராங்கனை கீர்த்திகாவும் (11.87 மீட்டர்) தங்கப்பதக்கம்  பெற்றனர்.போட்டி முடிவில் அரியானா 49 தங்கம், 32 வெள்ளி, 25 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்தமிழ்நாடு 17 தங்கம், 18 வெள்ளி, 21வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. பரிசளிப்பு விழாவில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி பொதுச்செயலாளர் ஜெயவந்த் குண்டு ஹமனவார், பொருளாளர் சுனில் பிரதான், துணைத் தலைவர் சந்திரசேகர், தமிழ் நாடு பாரா ஸ்போர்ட்ஸ் சங்க பொதுச்செயலாளர் கிருபாகரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். 

Feb 19, 2025

 தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி 

38வதுதேசிய விளையாட்டு போட்டி ஜனவரி 28ந் தேதி முதல் கடந்த 14ந் தேதி வரைஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது.நாடுமுழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி யில் சர்வீசஸ் (முப்படை) 68 தங்கம், 26வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு 27 தங்கம்,30 வெள்ளி,35வெண்கலம் என்று 92பதக்கங்களு டன் 6வது இடம் பெற்றது. தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதில் தடகளத்தில் 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கம்,வாள்வீச்சில் 4 தங்கம்,ஒரு வெள்ளி, வெண்கலம் என6 பதக்கம், நீச்சலில் 3 தங்கம்,10 வெள்ளி,6 வெண்கலம் என 19பதக்கம் வென்றதும் அடங்கும்.இந்த நிலையில் தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஒலிம்பிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது.

Feb 19, 2025

9-வதுஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி

9வதுஐ.சி.சி.சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.கராச்சியில் பகல்,இரவு மோதலாக நேற்று  தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.50 ஓவர்முடிவில் நியூசிலாந்து அணி5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது, பாகிஸ்தான் அணி47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இதன் மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியோடு தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா,வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. 

Feb 18, 2025

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் இன்று தொடக்கம்.

இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த கிரிக்கெட்திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். 

Feb 18, 2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 1476 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் கைப்பற்றிய சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ சுத்தின் மாரியப்பன் (உயரம் தாண்டுதல்) ஒலிம்பிக்கில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் காதுன்யா (வட்டு எறிதல்) உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இதில் அடங்குவார்கள்.நேற்று மாலை நடந்ததொடக்கவிழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்து ,வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுமேம்பாட்டுதுறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா, பொதுச் செயலாளர் சத்ய நாராயணா. முன்னாள் தலைவர் தீபா மாலிக், பாரா தடகள வீரர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் நாடு பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் கிருபாகர ராஜா வரவேற்றார். முடிவில் சென்னை மாவட்ட பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் எம்.எஸ். நாகராஜ் நன்றி கூறினார். முன்னதாக நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.41 பிரிவு) அரியானா வீரா நவ்தீப் 39.93 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பெண்களுக்கான குண்டு எறிதலில் (எப்.56 பிரிவு) அரியானா வீராங்கனை பூனம் ஷர்மா 6.86 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

Feb 17, 2025

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது

பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது. ஒருநாள் போட்டி ''ரேங்கிங்' பட்டியலில் 'டாப்-8' அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் ரோகித் சர்மா தலைமையிலான * இந்திய அணி கோப்பை வெல்ல காத்திருக்கிறது. 29 ஆண்டுக்கு பின் பாகிஸ்தானில் 1996ல் ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடந்தது. அப்போது அலைபேசி, சோசியல் மீடியா கிடையாது.29 ஆண்டுக்குப் பின், பாகிஸ்தான் மண்ணில் முதன் முறையாக ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க உள்ளது.  பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. லீக் சுற்றில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகளும் (எதிர், வங்கதேசம், பாக்., நியூசி.,) துபாயில் நடக்கவுள்ளன. அரையிறுதி, பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றால், போட்டிகள் துபாயில் நடக்கும். 

Feb 16, 2025

ஐபில் கிரிக்கெட் 2025 18வது சீசன்

ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 65 நாட்கள் நடக்கும் 18வது சீசனில் பைனல் உட்பட 74 போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் 12 நாட்கள், தலா இரண்டு போட்டிகள் நடத்தப்படும். மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் வரும் மார்ச் 22 ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. ஈடன்கார்டனில் நடக்கும் முதல் லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, தனது முதல் போட்டியில் மும்பை அணியை மார்ச் 24ல் சென்னையில் சந்திக்கிறது. 

1 2 ... 156 157 158 159 160 161 162 ... 170 171

AD's



More News