25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 18, 2026

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டி ஆகிய 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.பணியிடமானது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பட உள்ளன.வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:1)ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS.Officeல் குறைந்தது 03 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.2) 30 வயதிற்குள் மிகாமல் இருக்கவேண்டும்.3) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் SHG/PLF போன்றவற்றில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.4) வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணியிடமுள்ள வட்டாரத்தின் எல்கை பகுதிக்குள் வசிப்பவராக இரு வேண்டும். (Residence in same block)5) இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இருசக்கர வாகனம் நன்றாக இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.6) சிறந்த நன்னடத்தையுடன் இருக்க வேண்டும்.7) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டம்,புதுவாழ்வு திட்டம்/IFAD திட்டம் போன்றவற்றின்கீழ் பணிபுரிந்து நிரந்தர பணிநீக்கம்ஃதற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது.விண்ணப்ப படிவம்  இணையதள முகவரி www.virudhunagar.nic.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.1)விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணிபுரிந்ததற்கான பணிஅனுபவச் சான்று, கல்வித் தகுதி, சாதிச் சான்று ஆகியவைகளுக்கு ஒளிநகல் (Xerox Copy) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.2) விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.3) தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்ஃ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக வேலை நாட்களில், காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், விருதுநகர், அஞ்சல் - 626 002, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 16.02.2026 (திங்கட்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 18, 2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மற்றும்  டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய  மின்  பலகை  பொருத்தும்   தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Solar Panel Installation Technician training)   வழங்கப்படவுள்ளது.    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின்  வாழ்க்கை தரத்தை மேம்படுத்த  பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.    இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும்  டாக்டர் ரெட்டி நிறுவனம்  இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  சூரிய  மின்  பலகை  பொருத்தும்   தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி(Solar Panel Installation Technician training)  வழங்கப்படவுள்ளது.    இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களரகவும்இ  18 முதல் 32 வயது வரை நிரம்பி  இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். பத்து,  பன்னிரெண்டாம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு,  பொறியியல்படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு   முடித்தவர்கள்   விண்ணப்பிக்கலாம்.    இப்பயிற்சி காலம் 45 நாட்கள் ஆகும்.  இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகார  சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக  ரூ.18000/- முதல் ரூ.30000/-வரை கிடைக்க வழிவகை செய்யப்படும்.வேலைவாய்ப்பினை விரும்பாத இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.இப்பயிற்சி பெற  தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.  மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி உணவுக்கான  செலவினம்  டாக்டர் ரெட்டி நிறுவனம்   மூலமாக ஏற்கப்பட உள்ளது.தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 17, 2026

தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா.

  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவினைத் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்  (16.02.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 1 மாநகராட்சி (சிவகாசி), 5 நகராட்சிகள் (ராஜபாளையம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர்) மற்றும் 9 பேரூராட்சிகள் என மொத்தம் 15 நகர்ப்புற அலகுகளில் உள்ள 360 வார்டுகளுக்கு 627 விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தவும், திறமையை வெளிக்கொணரவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.          இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் குழந்தைகளின் உடல்நலத்தை பேண வேண்டும் என்ற எண்ணத்துடனும், மாணவ செல்வங்கள் அவர்களுக்கு பிடித்த விளையாட்டிலே உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடனும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.இன்றைக்கு, நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி வார்டுகளுக்கு தலா 3 தொகுப்புகள், நகராட்சி வார்டுகளுக்கு தலா 2 தொகுப்புகள், பேரூராட்சி வார்டுகளுக்கு தலா 1 தொகுப்பு என மொத்தம் 360 வார்டுகளுக்கு 627 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.இந்த ஒவ்வொரு தொகுப்பிலும் கிரிக்கெட் பேட், வாலிபால், ஃபுட்பால், சிலம்பக் கம்புகள், கேரம் போர்டு, செஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் என 30 வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், விளையாட்டுப் பொருட்களின் இருப்பு நிலை (Stock) மற்றும் விநியோகத்தை வெளிப்படையாகக் கண்காணிக்க "ஆடுகளம்" (TNSPORTS) என்ற மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு வார்டு பொறுப்பாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் குறியீட்டைப் பயன்படுத்தி, உபகரணங்களின் பயன்பாடு மற்றும் தினசரி நிலையை "ஆடுகளம்" (TNSPORTS) செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதுபோல் நம்முடைய அருப்புக்கோட்டை நகராட்சியில் 102 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.  நம்முடைய அரசு அமைந்த பிறகு,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 22 இலட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தாய்மார்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பணிகளை சிறப்பாக செய்துள்ள நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 17, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்  (16.02.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.         இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், நாராணபுரம் கிராமத்தில், ஸ்ரீ மாரியம்மாள் பயர் ஒர்க்ஸ் வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினையும், காயமடைந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும்,வெம்பக்கோட்டை வட்டம், விஜயகரிசல்குளம் கிராமத்தில், வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினையும், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தில், திவ்யா பயர் ஒர்க்ஸ் வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த ஒரு நபரின் வாரிசுதாரர்க்கு தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினையும், தீவிர சிகிச்சைக்குப் பின்பு மரணமடைந்த ஒரு நபரின் வாரிசுதாரர்க்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், காயமடைந்த ஐந்து நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும்,சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீவிர சிகிச்சைக்குப் பின்பு மரணமடைந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும்,மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், வி.இலுப்பைகுளம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் சிறிய அளவிலான பால்பண்ணை திட்டத்தின் மூலம் 4 சதவீத வட்டி மானியத்துடன் 3-கறவை உறுப்பினர்களுக்கு தலா ரூ.2 இலட்சத்து 70 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8 இலட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையினையும் என மொத்தம் 54 இலட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 7-நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 17, 2026

அமைச்சர் அவர்கள், நமக்கு நாமே திட்டம் 2025-2026ன் கீழ், கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி மற்றும் TURIP-2025-2026ன் கீழ், பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் (16.02.2026) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், நமக்கு நாமே திட்டம் 2025-2026ன் கீழ், ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி மற்றும் Tamil Nadu Urban Road Infrastructure (TURIP) 2025-2026ன் கீழ், ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.அருப்புக்கோட்டை நகராட்சியில் தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளும், தெருக்களில் குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இதனால் சாலைகள் மேடும் பள்ளமுமாக மாறி, போக்குவரத்துச் சீராக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சாலைகளைப் பழுதுநீக்கம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ. 21 கோடி நிதி வழங்கியுள்ளார். தற்போது நகராட்சியில் சுமார் 280 இடங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எங்கு எல்லாம் சாலைகள் சேதமடைந்துள்ளதோ, அந்தப் பகுதிகள் அனைத்தும் உடனடியாகச் சரிசெய்யப்படும்.இத்தகைய மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய நிதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 17, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சியில்  (16.02.2026) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வட்டார அளவிலான "விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை" காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்."தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN RIGHTS Project) என்பது உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ஒரு மாநில அளவிலான முன்னோடித் திட்டமாகும்.  மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எளிதாக்குதல், அவர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல், மற்றும் உரிய நேரத்தில் தேவையான நபர்களுக்குத் தகுந்த உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், 13 வட்டார மையம் மற்றும் 3 வருவாய் கோட்ட அளவில் "விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்க உள்ளது. அதில், முதற்கட்டமாக அருப்புக்கோட்டையில் ரூ.16 இலட்சத்து 22 மதிப்பிலும், காரியாபட்டியில் ரூ.16 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலும், இராஜபாளையத்தில் ரு.11 இலட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும், நரிக்குடியில் ரூ.15 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலும், வெம்பக்கோட்டையில் ரூ.15 இலட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலும், விருதுநகரில் ரு.20 இலட்சத்து ஏழாயிரம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள 6-வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த அளவில் மொத்தம் 27,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.  அதில், அருப்புக்கோட்டை ஊராட்சியில் 2,733 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.  அவர்களுக்கு தேவையான உயர்தர  மருத்துவ மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு  ஏதுவாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு என மொத்தம் 16-சேவை மையத்தினை அமைப்பதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.          இச்சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். சமுதாயத்தில் அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு மொத்தம் 6-பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சை மூலம் தசை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு உள்ளவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி சிகிச்சைகள் அளிக்கப்படும். உளவியல் ஆலோசனை (Psychological Counseling) மூலம்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் பயிற்சிகள் வழங்கப்படும்.மொழி மற்றும் பேச்சு தெரபி (Speech Therapy) மூலம்  பேச்சுத் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பேசும் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் அளிக்கப்படும். சிறப்புக் கல்வி (Special Education) மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த, அவர்களின் தேவைக்கேற்ற பிரத்யேகக் கல்வி முறைகள் கற்பிக்கப்படும்.நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய மாவட்டத்திற்கு இச்சேவை மையம் அமைவதற்கு ஏறத்தாழ ரூ.93 இலட்சத்து 59 ஆயிரம் வழங்கியுள்ளார்.எனவே, குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைவதற்கு தேவையான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக செய்து வந்துள்ளார். இதனை, பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.செந்தில்வேல்,  மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 17, 2026

தமிழ்நாடு அரசு குறு குழுமம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிட்கோவின், நெசவுக்குழுமம் (பெண்கள்) 16.02.2026, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு குறு குழுமம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிட்கோவின் மூலம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, கணபதிசுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் 377.16 லட்சங்களில் அரசாணை எண்.34. MSME (D1) துறை, நாள் 26.05.2022 மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் ரூபாய் 339.37 லட்சங்கள் மானியத்துடன் நெசவுக்குழுமம் (பெண்கள்) தொடங்கிட கடந்த 14.09.2022 அன்று தமிழ்நாடு சிட்கோவின் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.இதன் நீட்சியாக குழுமத்தின் கட்டிடப் பணிகள் முடிவுற்று அவற்றின் இயந்திர தளவாடங்களை நிறுவி குழுமம் தனது உற்பத்தியினை தொடங்கிட வருகின்ற 16.02.2026, திங்கட்கிழமை அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களால் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட உள்ளது என சிட்கோ கிளை மேலாளர் திரு.ஆ.பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்

Feb 14, 2026

அருப்புக்கோட்டை, விருதுநகர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் நகராட்சிகளில் புதிய சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்..

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் (13.02.2026) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி  அவர்கள் தலைமையில், இயக்குநர்(நகராட்சி நிர்வாக இயக்குநரகம்) திரு.ப.மதுசூதன்ரெட்டி,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர்  அருப்புக்கோட்டை நகராட்சி கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம், செவல் கண்மாய் புனரமைப்பு பணி மற்றும் கட்டங்குடி குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையம் உள்ளிட்ட ரூ.20.59 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அருப்புக்கோட்டை, விருதுநகர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் நகராட்சிகளில்  ரூ.24.33 கோடி மதிப்பில்  25.914 கி.மீ நீளத்திலான 154 புதிய சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியில் ரூ.341.92 கோடி மதிப்பிலும், நகராட்சிகளில் அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.165.75 கோடி மதிப்பிலும், இராஜபாளையம் நகராட்சியில் ரூ.134.55 கோடி மதிப்பிலும், சாத்தூர் நகராட்சியில் ரூ.47. 17 கோடி மதிப்பிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.108.83 கோடி மதிப்பிலும், விருதுநகர் நகராட்சியில் ரூ.109.13 கோடி மதிப்பிலும் என மொத்தம் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கு ரூ.943.63 கோடி மதிப்பிலான சாலைகள், வடிகால் வசதி, தெரு விளக்குகள், குடிநீர் வசதி, குளம் அபிவிருத்தி, பூங்கா, மின் மயானம், பேருந்து நிலையம், சந்தை, அலுவலக கட்டடங்கள், அறிவுசார் மையம், பள்ளி கட்டிடம் மற்றும் பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் ரூ.1285.55 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில், 2021-ல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 10 இலட்சம் மக்களுக்கு 60 MLD குடிநீரும், நகராட்சிகள் மூலம் 5 இலட்சம் மக்களுக்கு 22 MLD குடிநீரும், பேரூராட்சிகள் மூலம் 1 இலட்சம் மக்களுக்கு 7 MLD குடிநீரும் என  ஆக மொத்தம் 16 இலட்சம் மக்களுக்கு 89 MLD குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இராஜபாளையம் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர்த்திட்டம் ரூ.396 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு 3 இலட்சம் மக்களுக்கு கூடுதலாக43MLDகுடிநீர்வழங்கப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை, சாத்தூர், மற்றும் விருதுநகர் நகராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களைச் சார்ந்த 1286 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய 3 குடிநீர் திட்டங்கள் ரூ.1708 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.மேலும், மாவட்டத்தில் 2 கூட்டு குடிநீர் திட்டம் ரூ.60 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது முடிவடையும் போது 11 MLD குடிநீர் கூடுதலாக வழங்கப்படும். திருவில்லிபுத்தூர் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு பணி ரூ.9 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இது முடியும் போது 87 ஆயிரம் மக்களுக்கு 2 MLD குடிநீர் கூடுதலாக வழங்க முடியும்.காரியாபட்டி, மல்லாக்கிணறு, கொடிக்குளம் மற்றும் சேத்தூர் பேரூராட்சிகளுக்கான குடிநீர் பணிகள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இது முடியும் போது 71 ஆயிரம் மக்களுக்கு கூடுதலாக 7 MLD குடிநீர் வழங்கப்படும்.வரும் மார்ச் 2026 இல் இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் சுமார் 28 இலட்சம் மக்களுக்கு 205 MLD குடிநீர் தாராளமாக வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.அதுபோல பாதாள சாக்கடை திட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.330 கோடி மதிப்பில் சாத்தூர் நகராட்சி மற்றும் இராஜபாளையம் நகராட்சிகளில் இரண்டு பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.தற்போது நடைபெற்று வரும் திட்டங்களில் ரூ.297 கோடி மதிப்பீட்டில்  அருப்புக்கோட்டை நகராட்சி பாதாள சாக்கடை திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் முடியும் போது ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை பொறுத்தளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுமார் ரூ29,000 கோடி பணம் வழங்கி, எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில், சாலைகள், தெரு விளக்கு வசதிகள், கழிவுநீர் வசதிகள், மழை நீர் வடிகால்கள், மயானம், கல்வி கட்டடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட ஒரு மனிதன் காலையில் வீட்டிலிருந்து புறப்படுவதில் இருந்து, இரவு வீட்டில் தூங்கச் செல்லும் வரை தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், நீர் நிலைகளை மேம்படுத்தவும், சாலைகளை மேம்படுத்தவும் தொடர்ந்து நகர்ப்புர பகுதிகளுக்கு தேவையான அனைத்தையும் நம்முடைய தமிழக அரசு செய்திருக்கிறது.அது எல்லாவற்றை காட்டிலும் இன்றைக்கு காலை கலைஞர் மகளிர் உரிமை பெறும் மொத்தம் 1.31 கோடி பெண்களுக்கு 3 மாத உரிமைத்தொகையுடன், கூடுதலாக ரூ2000 என மொத்தம் ரூ.5000 ஒரே தவணையில் சிறப்பு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து இடங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், தேவையான அடிப்படை வசதிகளும், சாலைகளும், சந்தைகளும், பொது போக்குவரத்திற்கான பேருந்து நிலையங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு அனைவரும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழக அரசானது, அருப்புக்கோட்டை நகராட்சியின் மூன்று திசைகளிலும் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்து போக்குவரத்திற்கேற்றாற் போல், சிறப்பு செய்துள்ளது.அதுபோல, வைகையிலிருந்து கிடைக்கக் கூடிய தண்ணீர் உப்புத்தன்மை இருப்பதாக தாய்மார்கள் தெரிவித்த நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்கும் மூலதன நிதி 2023-24 இன் கீழ் ரூ.4.95 கோடி மதிப்பில் வைகையிலிருந்து பெறக்கூடிய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, சுத்திகரிப்பு செய்து பெறப்படும் தண்ணீரானது தாமிரபரணி தண்ணீர் போல் சுவையாக இருக்கக் கூடிய அளவில் கிடைப்பதற்கு இன்றைய தினம் வழிவகை செய்துள்ளோம்.அதுபோல, செவல் கண்மாயில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.4.45 கோடி மதிப்பில் நிரம்பியிருந்த ஆகாயத்தாமரையினை நீக்கி, நடைபயணம் மேற்கொள்வோருக்கு எளிதாகவும், சுற்றுலாத் தளம் போலவும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.அருப்புக்கோட்டை தொகுதிக்கு ஒரே ஒரு குடிநீர் ஆதாரம் தான் இருந்தது. தற்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூலம் இன்றைய தினம் மூன்றாவது குடிநீர் திட்டம் வழங்கவிருக்கிறோம். நம்முடைய மாவட்டத்திலே குடிநீர் பிரச்சினை இல்லாத ஊர் என்ற அளவிற்கு இந்த தொகுதி மாறியிருக்கிறது. அடுத்ததாக, அருப்புக்கோட்டை பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இத்தகைய திட்டங்களை நமக்கு அளித்துள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.இந்நிகழ்ச்சியில்,  அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 13, 2026

திருச்சுழி வட்டாரத்தில் சம்பூர்ணதா அபியான் முழு நிறைவு 2.0 திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டாரம் கல்லூரணி ஊராட்சியில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரத்தில் சம்பூர்ணதா அபியான் முழு நிறைவு 2.0 திட்டத்தினை நிதி ஆயோக் இயக்குநர் டி.நளினா சோபியா,இ.வ.ப., (இந்திய வருவாய் பணி) அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.சுகபுத்ரா,I A S., அவர்கள் (12.02.2026) தொடங்கி வைத்தார். பின்னர், திருச்சுழி வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள காரணிகளான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வேளாண்மை மற்றும் கல்வி உள்ளிட்டவைகளில் இலக்கினை அடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கும் விதமாகவும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.  மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் சம்பூர்ணதா அபியான் 2.0 திட்டம் (28.01.2026 முதல் 14.04.2026 வரை)தொடங்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வேளாண்மை மற்றும் கல்வி தொடர்பான முக்கியக் குறியீடுகளில் 100 சதவிகித இலக்கை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, சமூகப் பங்கேற்பும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மூலம் அடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் சம்பூர்ணதா அபியான் 1.0 (2024) திட்டத்தின் கீழ், முன்னேற விழையும் வட்டம்(Aspirational Block) மற்றும் முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட ஆறு குறியீடுகளும் 100 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.அதனைத்தொடர்ந்து, சம்பூர்ணதா அபியான் 2.0 திட்டம் மூலம் 28.01.2026 முதல் 14.04.2026 வரை அனைத்து துறைகளின் முழுமையான ஒருங்கிணைப்புடன் முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரத்தில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இளம் குழந்தைகள் தொடர்ந்து துணை ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்தல், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் அளவை மேம்படுத்துதல், அங்கன்வாடிகளில் செயல்பாட்டு கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வழங்குதல், சரியான பெண்கள் கழிப்பறை வசதிகள் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கால் மற்றும் வாய் நோய்க்கு எதிராக கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரித்தல் ஆகிய 6 குறியீடுகளிலும்,அதுபோல, முன்னேற விழையும் மாவட்ட அளவில், பிறக்கும் போது எடையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காசநோய்களின் சிகிச்சை விகிதத்தை மேம்படுத்துதல், கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வழக்கமான சுகாதார மற்றும் ஊட்டச்சத்து நாட்களை உறுதி செய்தல், பள்ளிகளில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவுபடுத்துதல் போன்ற 5 முக்கிய குறியீடுகளிலும் இந்த பிரச்சாரம் செயல்படும்.  எனவே, நம் மாவட்டம் மற்றும் வட்டாரப்பகுதிகளில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி என அனைத்து வகையிலும் துறை சார்ந்த ஒத்துழைப்பினை வழங்கி, வழங்கப்பட்டுள்ள குறியீடுகளில் முழுமை அடைய செய்ய வேண்டும். இதற்காக வட்டார அளவில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு, அது குறித்து தெரிந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ள சம்பூர்ணதா அபியான் 2.0 (Sampoornata Abhiyan 2.0) 2-ஆம் கட்ட திட்டத்தில் மாவட்டங்களுக்கு 6-வகையான இலக்குகளும், வட்டார பகுதிகளுக்கு 5-வகையான இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட முக்கிய வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும். இதுபோன்ற திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் பயன்படுத்தி எத்தகைய அளவு முன்னேற்றம் அடைகிறோமே அதை பொறுத்தே மாவட்டத்தின் முன்னேற்றமும், வட்டாரத்தின் முன்னேற்றமும் அமைந்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் 112 முன்னேற விழையும் மாவட்டங்களும் 500 முன்னேற விழையும் வட்டாரங்களும் பயன்பெற உள்ளன. இதில், விருதுநகர் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டமாகவும், முன்னேற விழையும் வட்டாரமாக திருச்சுழி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு நிகழ்ச்சி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் சர்வதேச அளவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அறிவியல் தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள சாதனைகளை கொண்டாடும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெண்களின் கல்வியறிவானது நம் குடும்பத்தை காப்பற்றுவதற்கு உதவிகரமானதாக அமையும். அதனைத்தொடர்ந்து, அறிவியலிலும் பெண்கள் சாதிக்க வேண்டும். அதற்கான உறுதிமொழியினை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், சம்பூர்ணதா அபியான் 2.0 என்னும் முழுமையான இயக்கத்தின் கீழ், திருச்சுழி வட்டாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கு முழுமையான இயக்க பணிகளில் எனது பங்களிப்பை அளிப்பேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், சம்பூர்ணதா இயக்கம் 2.0 விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவ செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட சம்பூர்ணதா இயக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், விவசாயம், மருத்துவம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீ.கேசவதாசன், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 13, 2026

வைகை இலக்கியத் திருவிழா.

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லூரியில் 10.02.2026 மற்றும் 11.02.2026 ஆகிய இரண்டு நாட்கள் வைகை இலக்கியத் திருவிழா நடைபெற்றது.முதல் நாள் நடைபெற்ற துவக்க விழாவில் விருதுநகர் மாவட்ட நூலக அலுவலர் திருமதி.சி.பாலசரஸ்வதி அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை, மாவட்ட வருவாய் அலுவலர் திருமிகு.ரா.ஆனந்தி அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.அவர் தம் வாழ்த்துரையில் எழுத்தாளர்களும், மாணவர்களும் சந்தித்துக் கொள்ளும் திருவிழா. நூலகத்தில் படித்த புத்தகங்களின் எழுத்தாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு. வாசிப்புப் பழக்கம் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்று கூறினார்.எழுத்தாளர் டாக்டர்.த.அறம் அவர்கள் பேசும் போது இலக்கியங்களில் “நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்” பற்றி பேசினார்.  எழுத்தாளர் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் கதைகள், சிலப்பதிகாரம் முதல் இன்றைய கதைகள் வரை விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை குறித்து பேசினார்.“மதுரையை பாடிய கதைகள்” குறித்து திரு.ம.மணிமாறன் அவர்கள் பேசிய போது திருமலை நாயக்கர் ஆட்சி, விளக்குத் தூண் வரலாறு, விக்டோரியா மகாராணிக்கு மதுரை கீழக்குயில் குடி மக்கள் எழுதிய கடிதம் வரை திறம்பட எடுத்துரைத்தார்.  காவல் கோட்டம் நூல் மதுரை குறித்து அழகாக பேசுகிறது என தெரிவித்தார். எழுத்தாளர் திரு.சு.இலட்சுணப் பெருமாள் அவர்கள் பேசும் போது பஞ்ச பாண்டவர்கள் கதை, கரிசல் மக்கள் வாழ்வியலோடு நகைச்சுவை உற்பத்தி செய்யப்படுகிறது.  தாலாட்டு, ஒப்பாரி பாடல்களில் இருக்கும் நகைச்சுவை குறித்தும் சிறப்பாக பேசினார். எழுத்தாளர் திரு.தேனி சீருடையான் “தேனி கதைகள்” பேசும் போது தேனி வட்டார கதைகளில் உலகில் மிகப் பெரிய வேட்டை எது என்றால் அது ஓநாய் தான் என்று குறிப்பிட்டார்.          எழுத்தாளர் பாமா அவர்கள் “நிமிர்ந்து நில், துணிந்து சொல்” என்ற தலைப்பில் பேசும் போது சமூக அக்கறையுடன் சமூகத்தை மாற்றும் மாணவர்கள் தேவை, உடல் வலிமையை நம்பி இருந்த காலம் போய் மன வலிமையும் அறிவு கூர்மையும் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.  மாற்று சிந்தனை, மாற்று கலாச்சாரம் இன்றைய கால கட்டத்திற்கு தேவை என்று குறிப்பிட்டார்.எழுத்தாளர் திரு.மதிகண்ணன் அவர்கள் தனுஷ்கோடி ராமசாமி கதைகளில் பெண்கள் குறித்து சிறப்பாக பேசினார்.இறுதியாக மாவட்ட நூலக ஆய்வாளர் திரு.எஸ்.மலர்வேந்தன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.  இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக கண்காணிப்பாளர் திரு.பழனிக்குமார், மாவட்ட இருப்பு சரிபார்ப்பு அலுவலர் திரு.கிரகம்துரை அவர்களும் செய்தனர். படைப்பரங்கம் இரண்டாம் அரங்கில் எழுத்தாளர்கள், திரு.எஸ்.காமராஜ், திரு.நந்தன் கனகராஜ் “கவிதைகளில் சூழலியல்” திரு.அன்னக்கொடி - “எனது நாவல்களில் சாதாரண மனிதர்கள்” திருமிகு.பிரியா பாபு – திருநங்கை செயற்பாட்டாளர் அவர்கள் “தமிழ் இலக்கியத்தில் திருநங்கைகள்”, திரு.பாண்டியக் கண்ணன் அவர்கள் “கலையும் இலக்கியமும் தோற்றமும் வளர்ச்சியும்”, எழுத்தாளர்.திரு.கண்மணி ராசா அவர்கள் “நதியும் பண்பாடும்” குறித்தும் திரு.ரெங்கையா முருகன் அவர்கள் “சிவகாசி காலண்டர் உருவாக்கிய பண்பாட்டு அசைவுகள்” குறித்து பேசினார்கள்.வைகை இலக்கியத் திருவிழாவின் இரண்டாம் நாளான 11.02.2026 அன்று எழுத்தாளர்கள் திரு.ச.தமிழ்செல்வன் அவர்களும், திரு.பாமயன் அவர்களும், துவக்கி வைத்தனர்.  நிகழ்ச்சிகள் பண்பாட்டு அரங்கம் – 1, பண்பாட்டு அரங்கம் – 2 என இரண்டு அரங்கங்களில் நடைபெற்றது.பண்பாட்டு அரங்கம் ஒன்றில் எழுத்தாளர் பேரா.சுந்தர்காளி அவர்கள் “பாணர் வரலாறு – சில பிரச்சனைகள்”  என்ற தலைப்பிலும், திரைப்பட இயக்குநர் திரு.லெனின் பாரதி அவர்கள் “சினிமாவில் இலக்கியத்தின் தேவை“ எழுத்தாளர் திருமிகு.சசிரேகா அவர்கள், “கரிசல் எழுத்தாளர்களின் படைப்புகளில் மானுடம்“ பேரா.சு.ராமர் அவர்கள், “தொன்மையும் தொடர்ச்சியும்“ பேரா.பா.பொன்னி எழுத்தாளர் அவர்கள், “சிலம்பின் ஓசை“, தொல்லியலாளர் திரு.காந்திராஜன் அவர்கள் “இலக்கியம் தொன்மையும் தொடர்ச்சியும்“ பேரா.பெ.க.பெரியசாமி ராஜா அவர்கள் “தமிழ் தொன்மையும் தொடர்ச்சியும்“ குறித்து பேசினார்கள்.பண்பாட்டு அரங்கம் -2-ல் பேரா.இரா.மானசீகன் அவர்கள் “இலக்கியத்தால் இளைப்பாறுவோம்“, கவிஞர்.நா.முத்துநிலவன் “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ?  இப்படிக்கு – தமிழ், திரு.மேகவண்ணன் எழுத்தாளர் “நவீன கதைகள்“, எழுத்தாளர்.மதுமிதா அவர்கள் “மதுமிதாவின் படைப்புலகம்“, திரு.பெ.இரவீந்திரன் அவர்கள், “கரிசல் நிலவியல்“, திருமிகு.விஜிலா தேரிராஜன், “பெண்களும் தண்ணீரும்“, பேரா.பா.ச.அரிபாபு அவர்கள் “தென் தமிழ்நாட்டில் நிகழ்த்துதலிலும் வழிபாட்டிலும் ஒயில் கும்மி“ என்கிற தலைப்புகளில் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.நிறைவு விழாவில் மாவட்ட நூலக அலுவலர் திருமிகு.சி.பாலசரஸ்வதி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  இந்நிகழ்வில் கல்லூரி பரிபாலன சபை தலைவர், செயலாளர், கல்லூரி முதல்வர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார்கள்.  இந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நூலக கண்காணிப்பாளர் திரு.பழனிக்குமார், மாவட்ட நூலக ஆய்வாளர் திரு.சோ.மலர்வேந்தன், மாவட்ட இருப்பு சரிபார்ப்பு அலுவலர் திரு.து.கிரகம்துரை, மாவட்ட மைய நூலகர் திரு.செந்தில்குமார், மாவட்ட வைகை இலக்கியத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அ.பெ.மாசிலாமணி, திருமிகு.மு.ராதா, திருமிகு.மோ.கிருஷ்ணவேணி, திருமிகு.இராஜேஸ்வரி, தொகுப்பாளர்.சி.முருகேசன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி மாவட்ட நூலக அலுவலர் கௌரவப்படுத்தினார். ஆறுமுகம் பழனிகுரு மகளிர் கல்லூரி மாணவிகளின் நாட்டுப்புற நடனம், பேச்சரங்கம் நிகழ்விலும் மாணவர்கள் சிறப்பாக பங்கேற்றார்கள்.      

1 2 ... 41 42 43 44 45 46 47 ... 140 141

AD's



More News