25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

May 23, 2025

தேங்காய் இனிப்பு சூப்

உடல் ஆரோக்கியத்துடன் தேவையான குளுக்கோஸ், சோடியம் பொட்டாசியம், அயோடின் போன்ற தாது உப்புக்கள் தேங்காயில் தாராளமாக உள்ளன. இது வாயுவையும், பித்தத்தையும் போக்கி உடலுக்கு வலிமையை சேர்க்கிறது.தேங்காயுடன் காரப்பொருள்கள் சேர்த்து சூப் செய்தால் இதன் சத்துக்கள் குறைவுபடும். ஆதலால், இனிப்புச் சுவையுடன் கூடிய சூப்பாகத் தயாரித்துக் கொள்வதே நல்லது.தேவையான பொருட்கள்- முற்றிய தேங்காய் - 2,முந்திரிப் பருப்பு 10,எலக்காய் 3,பச்சை அரிசி - 50,கிஸ்மிஸ் பழம் - 10,தண்ணீர் - தேவையான அளவு செய்முறை-நன்றாக முற்றிய தேங்காய் இரண்டை உடைத்து.துருவி150 மி.லி வெந்நீர் விட்டு சிறிது நேரம் கழித்து நன்றாகக் கசக்கிப் பிழிந்து, கெட்டியாகப் பால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய்த் துருவலை அம்மியில் வைத்து அரைத்து100 மி.லி நீர்விட்டு, நன்றாகக் கசக்கிப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.மீண்டும் ஒருமுறை200 மி.லி நீர்விட்டு அந்தப் பாலை அடுப்பில் வைத்து பச்சை அரிசி50 நெய்யாக உடைத்து பாலில் போட்டு கொதிக்க விட வேண்டும்.அரிசி வெந்து பதமானதும், இரண்டாவது பாலைவிட்டுக் கொதிக்கவிட வேண்டும் பாயாசம் போல ஆனதும்10 முந்திரிப் பருப்பையும்10 கிஸ்மிஸ் பழத்தையும் வறுத்துப் போட வேண்டும்.3 ஏலக்காய்களை தோல் போக்கி, விதைகளை மட்டும் பொடி செய்து போட வேண்டும். இனிப்பு சூப்பை கீழே இறக்கி சூடு சிறிது ஆறியதும், முதல் பாலை விட்டுச் சூடு ஆறும் வரை கரண்டியால் கிளறவும் இளஞ்சூடாக இந்த இனிப்பு தேங்காய் சூப்பை பரிமாறவும்.

May 23, 2025

பூசணிக்காய் சூப்

பூசணிக்காய் உடலுக்கும் உரமூட்டும் சக்தி பெற்றது உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறுநீரில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.தேவையான பொருட்கள் -பூசணிக்காய்- முக்கால் கிலோ, பால் - 3 கப்,வெண்ணெய் - 1மேசைக்கரண்டி ,மைதா மாவு -1 மேசைக்கரண்டி,மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்பசெய்முறை - பூசணிக்காயின் தோலைச் சீவி சிறுசிறு துண்டுகளாக்கி வேக வைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை மிதமாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய் விட்டு மாவைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். சூடான பால், பூசணிக்காய் விழுது, மிளகுத்தூள், உப்புத்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி வைத்து இறக்கவும்.சூடாகப் பரிமாறவும்.

May 23, 2025

மிளகு சூப்

சித்த மருத்துவத்தில் மிளகு சிறப்பான இடம் வகிக்கிறது. மிளகு சேராத சித்த மருந்தே இல்லையெனலாம். காமாலை, இருதய நோய் இருமல், தொண்டை தொடர்பான நோய்கள், அஜீரணம், குளிர் காய்ச்சல் போன்ற நோய்களை குணமாக்குவதுடன் அன்றாட உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மேற்சொன்ன நோய்கள் வராமலும் தடுக்கும். தேவையான பொருட்கள் -துவரம் பருப்பு - 50கிராம்,உப்பு - 2தேக்கரண்டி,மிளகு - 11/2 தேக்கரண்டி,துவரம் பருப்பு -1தேக்கரண்டி,நெய் -1/4 தேக்கரண்டி,கறிவேப்பிலை ஈர்க்கு,புளி - சிறு எலுமிச்சையளவு,மிளகாய் வற்றல் - 4 ,சீரகம் - 1/2 தேக்கரண்டி,தனியா - 1 தேக்கரண்டி,கடுகு - அரைக்கால் தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவுசெய்முறை - ஒரு பாத்திரத்தில் ஐம்பது கிராம் துவரம் பருப்பைப் போட்டு தண்ணர் விட்டுக் குழைய வேக வைத்து எடுத்துதெளிவாக இறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு நீரில் புளியும், உப்பும் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விட வேண்டும். புளிநீர் பாதியளவு சுண்டியதும், இறுத்து எடுத்து வைத்துள்ள துவரம் பருப்பு நீரைப் புளி நீரில் கொட்டவும்.'மிளகாய்வற்றல், மிளகு, சீரகம், துவரம் பருப்பு1 தேக்கரண்டி தனியா ஆகிய அனைத்தையும் அம்மியில் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து சூப்பில் கொட்டவும்.நூரை கூடி வாசம் வரும்போது நெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி இறக்கி கொஞ்சம் நீர் தெளித்துக் கலக்கிப் பரிமாறவும்.

May 16, 2025

வாழைப்பழ அல்வா

தேவையான பொருட்கள்: வாழைப்பழம் -8,சர்க்கரை -1 கப்,சோள மாவு-50 கிராம், பாதாம், முந்திரி,நெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: வாழைப்பழத்தை தோல் நீக்கி அரைக்கவும். கடாயில் நெய் சூடானதும் அரைத்த வாழைப்பழத்தை போட்டு கிளறவும். பின், சோள மாவை தண்ணீருடன் சேர்த்து கரைசலாக்கி ஊற்றவும். அதனுடன் சிறிது நெய் ஊற்றி, அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம் முந்திரியை பொடியாக நறுக்கி அதில் போடவும்.சுவைமிக்க,'வாழைப்பழ அல்வா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

May 16, 2025

காரட் அல்வா

தேவையான பொருட்கள் - காரட் நீளமான - 1கிலோ ,பால் - 800 மி.லி, சீனி - 1கிலோ,நெய் (அ) டால்டா - 400 கிராம் , ஏலம், கிராம்பு-சிறிதளவு, முந்திரிப்பருப்பு - சிறிதளவுசெய்முறை-காரட்டை கழுவி சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் பாலில் கேரட் துருவலை மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும். பால்வற்றி சீனியைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை வருகையில் சீனியை சிறியதாக எரியவிடவும். விடாமல் கிள்றிக் கொண்டே இருக்கவும். அல்வா பதத்தில் வரும்போது டால்டா(அ) நெய் சேர்க்கவும். ஏலம், கிராம்பு பொடி செய்து போடவும். அல்வா நன்றாக திரண்டு வந்தபின் நெய் அல்லது டால்டா தடவிய தட்டில் கொட்டி மேலே வறுத்த முந்திரிப்பருப்பையும் போடவும்.

May 16, 2025

பம்ப்கின் அல்வா

தேவையான பொருட்கள் - பூசணிக்காய் - 500 கிராம்,சீனி - 250 கிராம், ஏலம் - 4 எண்ணம், நெய் - 100 கிராம் செய்முறை: பூசணியை நைஸாக துருவி, வெறும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த பூசணி துருவலை போட்டு வறுக்கவும். தண்ணீர் இல்லாத போது சீனியைப் போடவும். அதன் மீது கோவாவைப் போட்டு புரட்டிவிட்டுக்கொண்டே இருக்கவும். அதன் மீது பொடி பண்ணிய ஏலம். இவற்றுடன் நெய்விட்டு மேலும், மேலும் புரட்டவும். புரட்டியதும் நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி விருப்பப்படி துண்டு போட்டுக் கொள்ளவும்.

May 16, 2025

ஆப்பிள் அல்வா

தேவையான பொருட்கள்: ஆப்பிள் துருவியது 200 கிராம், கோதுமை மாவு - 200 கிராம்,நெய் - 100 மில்லி, ஏலத்தூள் – சிறிதளவு, பால் - 200 கிராம்,முந்திரிப்பருப்பு – சிறிதளவு ,கேசரி பவுடர் – சிறிதளவு,சர்க்கரை - 400 கிராம்செய்முறை  - பாலில் ஆப்பிள் துருவியது போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்து கிளறவும். சீனியையும் கலந்து சற்று இருகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி விடவும் இது சுவையாக இருக்கும். உடம்புக்கு சத்தானது குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள்.

May 16, 2025

பாதாம் அல்வா 

தேவையான பொருட்கள்: சர்க்கரை-400 கிராம், பாதாம் பருப்பு-200 கிராம், நெய்-400 கிராம்,குங்குமப்பூ-1கிராம்,லெமன் எல்லோ பவுடர் - 1 சிட்டிகை,ஏலக்காய் - 5 கிராம்செய்முறை: பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு2 நிமிடங்கள் கழித்து, அவைகளை உரித்து பின்பு தண்ணீரில் 2.3 முறை அலசி எடுத்துக் கொள்ளவும் அலசிய பாதாம்பருப்புகளை100 மி.லி தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். பின்பு அடுப்பில் வாணலியை ஏற்றி அதில் பாதாம் பருப்பு விழுது,சர்க்கரையைப் போட்டு நன்றாக உருட்டும் பதம் வரை கிளற வேண்டும். பின்பு வாணலியைக் கீழே இறக்கி பாதாம்பருப்புவிழுது, சர்க்கரை கலவையில் நெய்விட்டுக் கிளற வேண்டும். அடுப்பில் வைத்து  நெய் ஊற்றிக் கிளறினால் அல்வாவின் நிறம் மாறி வரும் என்பதால் தான் வாணலியை இறக்கிய பின்பு நெய் ஊற்றிக் கிளற வேண்டும். நெய்விட்டு நன்கு கிளறிய பின்பு அந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். பின்பு அதில் ஏலப்பொடி, குங்குமப்பூ போட வேண்டும்.

May 16, 2025

கோதுமை அல்வா

தேவையான பொருட்கள்: சாம்பா கோதுமை 1 டம்ளர்,நெய் -முக்கால்( அ )1 டம்ளர்,முந்திரி 75 கிராம் ,அல்வா பவுடர் - அரை டீஸ்பூன்,ஏலக்காய்தூள் 1 டீஸ்பூன்செய்முறை - கோதுமையை முதல் நாளே ஊற  வைக்கவும்.ஊறவைத்த கோதுமையை மிருதுவாக அரைத்துக்கொள்ள  வேண்டும் அதை சுத்தமான வெள்ளைத்துணியில் போட்டு வடி கட்டி பால் எடுக்கவும்.மீண்டும் அந்த மாவை நன்கு அரைத்து, வெள்ளை துணியில் போட்டு வடிகட்டி பால் எடுக்கவும். இதே போல் நாலைந்து முறை செய்ய வேண்டும். வடிகட்டிய பாலை பாத்திரத்தில் ஊற்றி துணியால் மூடி வைக்கவும், சில மணி நேரம் கழித்துப் பார்த்தால் மேலாகத் தெளிந்த நீர் இருக்கும். அதை வடிகட்டி எடுத்துவிட வேண்டும்.அடியிலுள்ள கோதுமை மாவு கூழ்போல் காணப்படும். இதில் அல்வா பவுடரைக் கலந்து வைக் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுக்கவும் அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து சக்கரையைச் சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து, கம்பிப் பாகு வைக்கவும்.நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும். கூழ் வெந்து வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். அடுப்பு குறைந்த தீயில் எரிய வேண்டும். கைவிடாமல், அடி பிடிக்காமல் கிளற வேண்டும். எல்லாம் சேர்ந்து நன்கு வெந்தததும், அதில் ஊற்றிய நெய் தனியே பிர்ந்து வரும். கையில் தொட்டுப் பார்த்தால் ஒட்டாது அகலமான தட்டில் நெய் தடவி அல்வாவைக் கொட்டவும். நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அல்வா மீது தூவவும். கோதுமை அல்வா தயார்.

May 09, 2025

சாமை பாயாசம்

தேவையான பொருட்கள் - 100 gm சாமை ,125_150 கிராம் வெல்லம் பொடித்தது ,1/2 தம்ளர் பால், 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,1டேபிள்ஸ்பூன் நெய் ,10 முந்திரி பருப்பு ,1/2 டீஸ்பூன் ஏலக்காய் - சுக்கு பொடிசெய்முறை -  சாமையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை கழுவி விட்டு வேறு தண்ணீரில் அரை மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு மூன்று டம்ளர் அளவு தண்ணீர்விட்டு நன்கு வேகவிடவும்.15நிமிடத்தில் வெந்துவிடும். கெட்டியாக இருந்தால் தேவைப்பட்டால் பாயாசம் வைக்கும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சுக்கு பொடி எடுத்து வைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.ஏலக்காய் சுக்கு பொடி சேர்ப்பதால் பாயாசம் வாசமாக சுவையாக இருக்கும்.சாமை வெந்த பிறகு வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்கவிடவும்.வெல்லம் கரைந்ததும் தேங்காய் துருவல் ஏலக்காய் சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.சுவையான சாமை பாயசம் தயார். சிறு தானியத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் வெல்லத்தில் உள்ள இரும்பு சத்து விரத காலத்தில் நமக்கு உடல் சக்தியைக் கொடுக்கும்

1 2 ... 38 39 40 41 42 43 44 ... 72 73

AD's



More News