25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அழகுக் குறிப்பு

Jul 16, 2025

சருமத்தைப் பளபளப்பாக்கும் ஐஸ் கட்டிகள்.

அரிசி நீரை குளிர்சாதன பெட்டியில் உறைய வைத்துஐஸ் கட்டிகளை உருவாக்குங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் உங்கள்முகத்தில் ஐஸ் கட்டிகளைத் தேய்க்கவும், இது துளைகளை இறுக்கமாக்கி, கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும். ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.

Jul 14, 2025

தலைமுடி பளபளப்பாக

நன்கு புளித்த தயிரைத் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி வளர்வதுடன் பளபளப்பாகவும் இருக்கும்.பொடுகு குறையும். கற்றாழை மற்றும் தயிர் மாஸ்க் கற்றாழை சருமத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் நல்லது. இது உங்கள் உச்சந்தலையில் சேதமடைந்த செல்களை சரிசெய்ய உதவும் புரோட்டியோலிடிக் என்சைம்களைக் கொண்டுள்ளது. இது நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கற்றாழை உங்கள் தலைமுடியை மிருதுவாக மாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். கற்றாழையில் இருந்து ஜெல்லை பிரித்தெடுத்து, தயிர் சேர்த்து உங்கள் தலைமுடி முழுவதும் தடவவும். ஒரே இரவில் உங்கள் தலைமுடியை ஒரு துணியால் மூடி வைக்கவும். காலையில் லேசான ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ தலைமுடி பளபளப்பாக இருக்கும்.

Jul 11, 2025

 தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்

தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும். தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவிப் பிடிப்பது மிகவும் நல்லது, இவ்வாறு செய்வதினால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது. இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசனை பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணையை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றிஇருக்கும்.

Jul 04, 2025

கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் மகிழம்பூ

கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் மிகவும் முக்கியம் வாய்ந்தது மகிழம்பூ என்றே சொல்லலாம். வேனல் கட்டி  சூடுகட்டி, உஷ்ணகட்டி, போன்ற அனைத்தையும் நீக்க ஒரு கைப்பிடி மகிழம் பூவை நீர் விட்டு அரைத்து அப்படியே முகத்திலும், உடலில் கட்டிகள் இருக்கும் இடத்திலும் தடவி காய்ந்ததும் குளித்து வர கட்டிகள் காணாமல் போகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.

Jun 30, 2025

தலை முடி பிரச்சனைக்கு..

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும்.முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வர முடி வளரும்.பூசனிக்கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து சாறு எடுத்து கசக்கி சாறுஎடுத்து தலையில் தடவி வர சொட்டையில் முடிமுளைக்கும்.

Jun 23, 2025

சுத்தமான பற்களுக்கு….

அன்னாசி பழத்தைக் கடித்து சாப்பிட, அதில் உள்ள 'bromelain' பற்களை வெண்மையாக்கும்."சார்கோல் பவுடரால்" வாரம் இருமுறை பல் தேய்க்க வேண்டும்.சாக்லேட், சர்க்கரை, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஆயில் புல்லிங், வாழைப்பழத் தோலால் பற்களில் மசாஜ் செய்வது நல்லது.(தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் இதைச் செய்யலாம்)எலுமிச்சை தோலால் பல தேயக்க பற்கள் சுத்தமாகும்.உப்பு கொண்டும் பல் தேய்க்க வேண்டும்.

Jun 21, 2025

கண் கருவளையங்கள் நீங்க..

உருளைக்கிழங்கை மெல்லிய வில்லைகளாக நறுக்கி கண்ணுக்கு கீழ் பகுதியில் சிறிது நேரம் வைத்து கழுவி விடலாம் அல்லது உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் அடித்து கண்ணுக்கு கீழ் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கருவளையம் நீங்கி விடும்.

Jun 17, 2025

சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க செம்பருத்திபூ...

தங்க பஸ்பம் என்று சொல்லப்படும் இதை  உள்ளுக்குள் எடுப்பதன் மூலம் பலவிதமான மருத்துவ குணங்களை பெறலாம். பூ, இலை இரண்டுமே சருமத்துக்கும், கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.முழுமையான செம்பருத்தி பூவை காய வைத்து பொடித்து கொள்ளவும்.செம்பருத்திபூ பொடி_3 ஸ்பூன், பாசி பயறு மாவு__3 ஸ்பூன், பால் தேவைக்கு.இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி ஈரப்பதம் சீராக இருக்கும் சருமம் புத்துணர்ச்சியுடனும், முகத்தில் தனி அழகும் இருக்கும்.

Jun 16, 2025

புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கும் நலங்கு மாவு.

கோடை காலங்களில் வியர்வை துர்நாற்றம் பொது இடங்களுக்குச் செல்ல சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு நலங்கு மாவு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நறுமணத்தை ஏற்படுத்தும் பல மூலிகைகளை சேர்த்து அரைத்து உபயோகிப்பதால் புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கிறது. முகப்பருக்கள் குறைவதுடன் நாளடைவில் மறைந்து போகும். இது காய்ந்த ரோஜா, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு, கார் போக அரிசி, முல்தானி மெட்டி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, புலாங்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்த இந்த நலுங்கு மாவை குளிப்பதற்கு முன் உடல் முழுவதும்தேய்த்து குளித்தால் தொற்றுக்களை தடுத்து உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

Jun 14, 2025

பித்த வெடிப்பு குணமாக...

 விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 26 27

AD's



More News