25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 09, 2026

தொடர்ந்து மொபைலைப் பயன்படுத்தும் பழக்கத்தால். கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

 ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் .30 வயது பெண்... நள்ளிரவு வரை தொடர்ந்து மொபைலைப் பயன்படுத்தும் பழக்கம் எனக்கு இருந்தது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பல மணி நேரம் திரையில் பார்த்ததால் அவரது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. படிப்படியாக அவளுடையகண்களில் கண்பார்வை பலவீனமடைந்து இறுதியாக கிட்டத்தட்ட மறைந்தது. "இந்தசம்பவம் தொழில்நுட்பம் வசதியை வழங்குகிறது என்பதை நினைவூட்டுகிறது, ஆனால் கவனமாக இல்லாவிட்டால், அதற்கு நிறைய செலவாகும்.

May 09, 2026

2.5 மில்லியன் ஜிகாபைட் (GB).

மனித மூளையின் சேமிப்புத் திறன் சுமார் 2.5 மில்லியன் ஜிகாபைட் (GB). இது சுமார் 300 ஆண்டுகள் ஓடக்கூடிய வீடியோவிற்குச் சமம். ஆனால், போதிய தூக்கம் இல்லையென்றால் இந்தத் தரவுகளை மூளையால் சரியாகச் சேமிக்க முடியாது

May 09, 2026

வானில் நிகழப்போகும்  ப்ளூ மூன்.. விண்கற்கள் மழை!

! மே மாதத்தில் "ப்ளூ மூன்" தோன்றுகிறது. ஏற்கனவே 1 ஆம்தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில், மே 31 ஆம் தேதி ஒரு பவுர்ணமி தோன்றுகிறது. வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்; இதுபோக மற்றொரு அரிய நிகழ்வாக "விண்கற்கள் மழை" வானில் இந்தமாதம் தோன்ற உள்ளது.

May 08, 2026

வெயில் காலத்தில் நிம்மதியாக தூங்க.....

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் இரவில் வெயிலின் புழுக்கம் இருப்பதை உணர முடியும்.எனவே இரவில் தூக்கமில்லாமல் பலரும் தவித்து வருகிறோம். நீங்கள் தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவும்.தளர்வான, பருத்தி உடைகளை அணிந்து தூங்குவது சிறந்தது. அதேசமயம் தூங்குவதற்கு முன் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்த்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.

May 08, 2026

வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!.

உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் '9013151515' என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம்

May 08, 2026

கேன்சரை அழிக்கும் திராட்சை விதை.

இறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க, இன்னொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது திராட்சையின் விதைதான். இதை சாப்பிட்ட 48 மணி நேரத்திலேயே கேன்சர் செல்களை ,அழிக்கும் சக்தி இதற்குண்டு  என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது

May 08, 2026

108 என்ற எண்ணிற்கு அழைப்பதை நிறுத்துங்கள்

இந்திய அரசு அவசரகால எண்களை வெளியிட்டுள்ளது: கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்: 102. சாலை விபத்து: 1073. மருத்துவ ஆலோசனை: 104. மற்றவருக்கான ஆம்புலன்ஸ்: 108.

May 08, 2026

பெண்களுக்கு எச்சரிக்கை: "பெர்ஃப்யூம்" பெயரில் மயக்க மருந்து மோசடி?

கோயம்புத்தூர், புருக்ஃபீல்டு மாலில் 2 (Brookfield Mall) நடந்ததாக கூறப்படும் சம்பவம்:ஒரு பெண்ணிடம்'பெர்ஃப்யூம் மணம் பார்க்கலாமா?'என்று கேட்டு, வாசனை காட்டியதும் மயக்கமடைந்து உடமைகள் திருடப்பட்டதாக தகவல்.மால்கள், பார்க்கிங் பகுதிகளில் குறைந்த விலையில் பெர்ஃப்யூம் விற்பனை என்ற பெயரில் மயக்க மருந்து கலந்த திரவத்தை பயன்படுத்துவதாக எச்சரிக்கை.எனவே பெண்கள் அனைவரும்:அறிமுகமில்லாதவர்கள் கொடுக்கும் எந்த வாசனை திரவத்தையும் முகர வேண்டாம்.தனிமையான இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகமான நபர்களை கண்டால் உடனே. பாதுகாப்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.எச்சரிக்கையாக இருப்பதே பாதுகாப்பு!

May 08, 2026

ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் ,எப்போது வேண்டுமென்றாலும் சாயலாம்..

நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது உன் அறிவிலோ அழகிலோ அந்தஸ்திலோ படிப்பிலோ பணத்திலோ இல்லை...மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் இருக்கிறது...உனக்கு மேலே உள்ளவனை பாத்து ஏங்காதே...உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே...உன்னை யாருடனும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு..தற்பெருமை பேசுபவரிடம் தரத்தை எதிர்பார்க்காதே...' பழகியவரிடம் பணத்தை எதிர்பார்க்காதே...பணக்காரர்களிடம் பாசத்தை எதிர்பார்க்காதே...உறவினர்களிடம் உண்மையை எதிர்பார்க்காதே... உலகத்திடம் எதையுமே நிரந்தரமாக எதிர்பார்க்காதே...'யாரயும் பழிவாங்க நினைக்காதே .கடந்து செல்ல கற்றுக்கொள்...'

May 07, 2026

வறுத்தெடுக்கப்போகும்  வெயில்.

இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வழக்கத்தை விட 15 முதல் 40 நாட்கள் வரை கடுமையான வெப்பம் நிலவும் எனப் புதிய ஆய்வில் எச்சரிக்கை.மேலும் கூடுதலாக 20 முதல் 40 இரவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பத்துடன் காணப்படும் என்றும், கனமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் 10 முதல் 30 நாட்கள் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் CEEW அமைப்பு கணிப்பு.தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் மற்ற பகுதிகளை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிப்பு.

1 2 ... 42 43 44 45 46 47 48 ... 131 132

AD's



More News