வெள்ளரிக்காய் 96% தண்ணீர் சத்து கொண்டது. அதனால், கோடை காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்க உதவுகிறது.வெள்ளரிக்காயில் உள்ள தண்ணீர்ச்சத்து உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கலை போக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவு. அதனால், எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
வீடு மற்றும் கோயில்களில் நறுமண்த்திற்காக வளர்க்கப்படும் மகிழம்பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.மகிழம்பூ மற்றும் மகிழம்பூ விதைகளின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதது. இதன் அறிவியல் பெயர் மிமுசோப்ஸ் இலாங்கி (Mimusops Elengi) மகிழம்பூவிலிருந்து வாசனைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், பசியின்மை முதல் மன அழுத்தம் வரை அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கும்.மகிழ மரத்தின் பிஞ்சுகளை இரண்டு எடுத்து வாயில் மென்று அவற்றை துப்பிவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.மகிழம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை மூக்கில் உறிஞ்சினால் தலையில் கோர்த்து கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலைபாரம் நீங்கும்.மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை, மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோள் பட்டை வலி போகும்.மகிழம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து தலைக்கு தடவி வந்தால், உங்களுக்கு பொடுகு, பேன் தொல்லை இருக்காது.
வெள்ளைக்கருபுரோட்டின் அதிகம், கலோரிகள் குறைவு.தசைகளை வலுவாக்க உதவுகிறது.கொழுப்புகள் இல்லை.ஒரு பெரிய முட்டையின் வெள்ளைக்கருவில் 3.6 கிராம் புரோட்டின் உள்ளது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு.முழு முட்டை புரோட்டின் மற்றும் கலோரிகள் அதிகம்.கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது.ஒரு பெரிய முழு முட்டையில் 6 கிராம் புரோட்டின் உள்ளது.ஓட்டுமொத்த ஊட்டச்சத்தை பெற நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வு.வைட்டமின் ஏ,டி. ஈ. கே. பி 12 போன்ற வைட்டமின்களும், பாஸ்பரஸ், செலினியம், அயோடின் போன்ற தாதுக்களும் உள்ளன.
முள்ளங்கி கிழங்கு வகை வெள்ளை, சிவப்பு "ஆகிய நிறங்களில்தான் முள்ளங்கி கிடைக்கிறது. சில இடங்களில் மற்ற நிறங்களிலும் பயிராகிறது. நன்கு சாப்பிட்ட திருப்தி வேண்டும் என்பவர்கள் மட்டும் சிவப்பு முள்ளங்கியை அதிகமாகப் பயன்படுத்துங்கள்.முள்ளங்கி, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். முள்ளங்கி இலை பசியைத் தூண்டி, சிறுநீரைப் பெருக்கி, தாது பலம் கொடுக்கும். இதைச் சமைத்து உண்டால் அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, நீர்ச்சுருக்கு, வயிற்று எரிச்சல், ஊதிய உடம்பு, வாதம், வீக்கம், காசநோய், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.காலை, மாலை இருவேளையும் முள்ளங்கிச் சாற்றை அருந்தினால், சிறுநீரகக் கோளாறு நீங்கும். குழந்தைகள் மந்தமாக இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கவும், நன்கு படிக்கவும், உடல் உறுதியுடன் வளரவும் முள்ளங்கியுடன் முள்ளங்கிக் கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இவை சுறுசுறுப்பை வழங்கும்.சிறுநீரில் கல் சேராமல் இருக்க முள்ளங்கிச் சாம்பார் செய்து சாப்பிடலாம்.நீர் அதிகமாக இருக்கிறது, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன.வெள்ளை முள்ளங்கியின் பலன்கள்அதிகக் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும். சிறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் கல் கரைந்து வெளியேறும். ஆஸ்துமா நோயாளிகள் வெள்ளை முள்ளங்கியைச் சாப்பிட வேண்டாம்.சிவப்பு முள்ளங்கியின் பலன்கள்சிவப்பு முள்ளங்கியில் கந்தகம், கால்சியம், வைட்டமின் சி சத்து ஆகியவை இருக்கின்றன.கை, கால் மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் அமில அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும், சிறுநீரை வெளியேற்றும். அதிக அசிடிட்டி உள்ளவர்கள் சாப்பிடலாம்.
மூளையையும் உடலையும் இணைக்கும் உள்ள நரம்பு பாதையை வேகஸ்நரம்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு செரிமானம், இதய துடிப்பு மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற குறிப்பிட்ட உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. வேகஸ் நரம்பில் பற்றாக்குறை ஏற்படும் போது தூக்கமின்மை, நோய் எதிர்ப்புசக்தி குறைதல் மற்றும் மனத் தெளிவு குறைதல் போன்ற உடல் அறிகுறிகள் தோன்றும். ஆகையால் இந்த நரம்பை வலுப்படுத்த தேவையான ஊட்டச்சத்து அவசியமாகும். கோலைன் சத்து நரம்பு மண்டலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இவை ஆறிவாற்றல் திறன் அதிகரிப்பு மற்றும் இதயத்தை பாதுகாக்கிறது. சிவப்பு இறைச்சி மற்றும் மீன்களில் இவை அதிகம் உள்ளது. இதில் உள்ள பாரோரெஃப்ளெக்ஸ் உணர்திறனை மீட்டெடுக்க உதவுகிறது.வேகஸ் நரம்பின் ஆரோக்கிய மூலமாக வைட்டமின் பி12 உள்ளது. பால், முட்டையில் இந்த ஊட்டச்சத்து அதிகளவுஉள்ளது. இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஈடுசெய்யப்படும்.பச்சை இலைக் காய்கறிகளில் ஏராளமாகக் காணப்படும் மெக்னீசியம் உள்ளது. இது தசைச் சுருக்கம்,ரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள சோடியம், தசைச் சுருக்கம், நரம்பியல் செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் போன்ற பல உடலியல் செயல்முறைகளுக்கு உதவுகிறது.சியா விதைகள், அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றில் காணப்படும் ஒமேகா-3 ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து, சிறிது துளசி இலையும் கருப்பட்டியும் சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சிக்குடித்தால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் உடனடியாகக் குறையும்.சுவாசக் கோளாறுகளைக் குணமாக்குவதிலும் லவங்கப் பட்டைபின் பங்கு அதிகம்.தொண்டையை அடிக்கடி செருமவைக்கும் வறட்டு இருமலுக்கு அதிமதுரத்துடன் லவங்கப்பட்டை சேர்த்துப் பொடியாக்கி ஐந்து சிட்டிகை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்வயிற்றுப்புண்களைக் குணமாக்க லலங்கப் பட்டையைப் பயன்படுத்தலாம்பூஞ்சைகள் மற்றும் சில வகையான வைரஸ்களை எதிர்த்துப் போரிடக்கூடியது என்பதால் லவங்கப்பட்டை சேர்ந்த உணவுப் பதார்த்தங்கள் அவ்வளவு எளிதாகக் கெட்டுப்போகாதுதாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மையும் பட்டைக்கு உண்டு. தலைபாரம் இருக்கும்போது, பட்டையை நீர்விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால், விரைவில் பாரம் இறங்கும்.
கிராம்புகளில் முதன்மையான செயலில் உள்ள இரசாயனங்களில் ஒன்று யூஜெனால் ஆகும், இது பெரும்பாலும் கிராம்பு எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. அதன் கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் பல்வேறு இனங்களால் ஏற்படும் நோய்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுகின்றன. கிராம்பு அத்தியாவசிய எண்ணெய் எலிகளில் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் என்று ஜர்னல் ஆஃப் ட்ரேஸ் எலிமெண்ட்ஸ் அண்ட் மினரல்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம்பு சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தலாம் என்று இது அறிவுறுத்துகிறது. கிராம்பு எண்ணெய் ஒரு கிருமி நாசினியாக நன்றாக வேலை செய்கிறது.உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் ஈ. கோலி உள்ளிட்ட மூன்று வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.உலர்ந்தகிராம்புமொட்டுகளால்கல்லீரல்ஹெபடோபாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது புதிய செல்கள் உருவாவதை ஊக்குவிப்பதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கல்லீரலை நச்சு நீக்குகிறது மற்றும் யூஜெனால் மற்றும் தைமால் போன்ற பல்வேறு செயலில் உள்ள பொருட்கள் மூலம் பாதுகாப்பை வழங்குகிறது.இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இன்சுலின், கிராம்பு சாற்றைப் போலவே செயல்படுகிறது. டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒன்று முதல் மூன்று கிராம் கிராம்பு கிராம்பை ஒரு மாதத்திற்கு உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், லிப்பிடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம்.இரத்த சர்க்கரை வளர்சிதை மாற்றத்திற்கும் ஆரோக்கியமான மாங்கனீசு இரத்த அளவுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது, இது கிராம்பு நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது நிர்வகிக்க உதவும் என்ற கருத்தை ஆதரிக்கிறது.
அத்திப்பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்கக்கூடியது, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கிறது. ஒரு அத்திப்பழத்தில் சுமார்30 கலோரிகள்,9 கிராம் கார்போஹைட்ரேட்,6 கிராம் இயற்கைச் சர்க்கரை,1 கிராம் நார்ச்சத்து ஆகியவை காணப்படுகின்றன. மேலும், இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்புச்சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மைகள் மற்றும் நார்ச்சத்து, இன்சுலின் சுரப்பை அதிகரித்து அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.35 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாக பார்க்கப்படுகிறது.இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மந்தமாக்கி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்காமல் தடுக்கும். மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழத்தை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் இது அவர்களுக்கு பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்குகிறது.
தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த சமையலில் பிரிக்க முடியாதது புளி. இந்த புளியை தவிர்த்து பெரும்பாலும் எந்த உணவையும் சுவையாக செய்துவிட முடியாது. இப்படி சமையலில் எப்படி தவிர்க்க முடியாத பொருளாக மாறியுள்ள புளியானது, உடல் ஆரோக்கியத்திலும் பல நன்மைகள் நமக்கு வழங்குகிறது. செரிமானத்தை தூண்டவும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் புளி முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது.புளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதயத் துடிப்பைக்கட்டுப்படுத்தவும்திரவத்தைசமநிலைப்படுத்தவும் பயன்படுகிறது.புளியில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது.புளியை உணவில் சேர்த்து கொள்ளும் போது, பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும். புளி ஒரு டானிக் போலவும், கிளீனிங் ஏஜென்ட் போலவும் செயல்படுகிறது. இது குடல் மற்றும்பிறசெரிமானஉறுப்புகளின்செயலிழப்பைக்கட்டுப்படுத்துகிறது.புளியானது சட்னிகள் முதல் கறிகள் வரை, உணவில் சுவையை சேர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை வளப்படுத்துகிறது..
கிராம்புகளில் ஃபிளாவனாய்டுகள், ஃபீனாலிக் கலவைகள் மற்றும் யூஜெனால் ஆகியவை மற்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கின்றன, வீக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன. புற்றுநோய், இதய நோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களைத் தடுப்பதன் மூலம், வழக்கமான கிராம்பு பயன்பாடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தொற்று நோய்களுக்கு எதிராக பாதுகாக்கும் . பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கிராம்பு மிகவும் சிறந்தது என்பதால், அவை அடிக்கடி வாய்வழி பராமரிப்பு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் வலி நிவாரணி குணங்கள் பல்வலியைக் குறைக்கும் மற்றும் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும். கிராம்பு எண்ணெயுடன் சிகிச்சையளிக்கப்பட்ட பற்கள் கட்டுப்பாட்டுப் பற்களைக் காட்டிலும் குறைவான டிகால்சிஃபிகேஷனை வெளிப்படுத்தியதாக NIH தெரிவிக்கிறது.