நான் மிகவும் முக்கியமானவன். ஆனால் ஒரு சில வினாடிக்கு மேல் என்னை உங்களிடம் வைத்திருக்க முடியாது. நான் யார்?மூச்சு காற்று. நான் ஒரு பாறை. ஆனால், நீரில் போட்டால் கரைந்து விடுவேன். நான் யார்? ஐஸ் கட்டி
உயரமான இடத்தில் இருந்து தூக்கி எரிந்தாலும், அதற்கு ஒன்றும் ஆகாது. அனால், தண்ணீரில் போட்டால் மட்டும், அது செத்து விடும். அது என்ன?காகிதம்இவருடைய உடம்பெல்லாம் சிகப்பு, குடுமி பச்சை. யார் இவர்?தக்காளி
முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன? குயில் உடம்பு முழுவதும் முள்.அது என்ன? கள்ளிசெடிகையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? தையல்காரர்
. அரசன் இல்லாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன். அவர்கள் யார்?சூரியன், சந்திரன் என்னை கீழே போட்டால், நான் உடைந்து விடுவேன். என்னைப் பார்த்து சிரித்தால், நான் உன்னைப்பார்த்து சிரிப்பேன். நான் யார்?கண்ணாடி
முள்ளு முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே, வைக்கோல் போருக்குள்ளே, கண்டெடுத்தேன் வைரமணி. அது என்ன?பலாப்பழம்விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? உலக்கை
.குடியிருக்க கோட்டை கட்டும், அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும்.அது என்ன? பட்டாம்பூச்சி.வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி.அவர்கள் யார்? பூட்டும், சாவியும்
எட்டு பேர் நாங்கள், எங்கள் தலைவரை காப்பாற்ற முன்னால் போவோம், ஆனால் பின்னால் வரமாட்டோம். நாங்கள் யார்? சதுரங்க சிப்பாய். சிறகடித்து பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் சொல்வர். அவன் யார்? புறா.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன? மின்மினிப் பூச்சி