25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பழமொழி.

Sep 26, 2023

அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்

அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம் பொருள்: குணத்தால் தீயவர்களாக இருப்பவர்கள் வெளிப்புறத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதை உணர்த்துகிறது.

Sep 19, 2023

அப்பன் அருமை செத்தால் தெரியும்

அப்பன் அருமை செத்தால் தெரியும்பொருள்: ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் இறந்த பின்பு அக் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அது போல ஒரு விஷயத்தை நாம் இழக்கும்  வரை  அதன் அருமையை நாம் அறிவதில்லை.

Sep 12, 2023

.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்

.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும் பொருள்:: வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்தால் அவை‘வைக்கோல் போர்’ என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றி முழுமையாக எறிந்துவிடும்.

Sep 05, 2023

.இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லை

.இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லைபொருள்: ஒரு விடயத்தை பற்றி நன்கு அறியாமல் ,அது இப்படி தான் என்று முன் கூட்டியே, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவது தவறு.

Aug 29, 2023

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான்

 "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்" என்பதே சரி. ஏழை ஒருவன் பணக்காரன் ஆகும்போது, அவரிடம் யாரேனும் பண உதவிகேட்டு நள்ளிரவில் வந்தாலும் அவர்களுக்கு அவன் உதவி செய்வான்

Aug 22, 2023

இளைத்தவனுக்கு எள்ளும் கொழுத்தவனுக்கு கொள்ளு

 இதற்கு அர்த்தம்-உடல் மெலிந்து வலிமை இல்லாதவனுக்கு என்னை குடுத்தால் வலிமை பெறுவான் .உடல் எடை அதிகமாக எடையை குறைக்க வேண்டும் என்பவனுக்கு  கொள்ளு குடுத்தால் உடல் எடை குறையும் இதுதான் இந்த பழமொழியின் அர்த்தம்

Aug 15, 2023

.ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.

.ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.பொருள்: பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்குஇழைக்கும் போது, அவரால் எதிர்க்க முடியாமல் ,இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர், தீங்கிழைத்தவர்  எப்படிப்பட்டவர் ஆயினும், அவரை அழித்து விடும்.

Aug 08, 2023

ஆய்ந்து பாராதான் காரியந்தான் சாந்துயரந் தரும்.

ஆய்ந்து பாராதான் காரியந்தான் சாந்துயரந் தரும்.     பொருள்: ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது   துயரத்தை  கொடுத்துவிடும். 

Aug 01, 2023

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு

 பொருள்: நல்ல மாட்டிற்கு ஒரு சுவடு என்பதே உண்மையான பழமொழி. இதில் சுவடு என்ற வார்த்தை மருவி சூடு ஆகி விட்டது. சுவடு என்றால் கால் தடம் என்று பொருள். அந்த காலத்தில் சந்தையில் மாடு வாங்கும்பொழுது எந்த மாட்டின் கால் தடம் நன்றாக(அழுத்தமாக) இருக்கிறதோ அதுவே பலம் பொருந்திய மாடு என்பதை அறிந்து அதை வாங்குவது வழக்கம்.

Jul 25, 2023

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க

பொருள்: தாசில் என்ற வார்த்தைக்கு பொருள் அதிகாரம். எந்த ஒரு விடயத்தின் மீதும் அதிகாரம் செலுத்த ஆசைப்படுவதற்கு முன்பாக அதற்கான உழைப்பை போடவேண்டும். அதிஷ்டத்தை நம்பி இருந்தால் எதுவும் ஆகாது என்பதே இதன் பொருள்.

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News