ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.பொருள்:ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.உண்மையான பொருள்:மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள்(ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள்(நூறு பேர்) பக்கம் நின்றாலும்,போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் பொருள்:சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை. பொருள்:என்ன வேலைக்கு போவது என தெரியாமல் நிற்பவன் தான், போலிஸ் வேலைக்கு போவான்; வேறு வேலைக்கு போக வழி தெரியாதவன், வாத்தியார் வேலைக்கு போவான்.உண்மையான பொருள்:மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.
ஆற்றில் போட்டாலும் அளந்து போடுசொல்லப்படும் பொருள்:நாம் தர்மம் செய்யும் போதோ, வேறு ஏதாவது செய்யும் போதோ அளவுடன் தான் கொடுக்க / செய்ய வேண்டும். உண்மையான விளக்கம்:அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது சரியான பொருள்.அகம் என்பது உடல். அதாவது என்ன சாப்பிட்டாலும் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது,இதன் அர்த்தம்.
சொல்லப்படும் பொருள்:தெருவில் போகும் போது நாய் குரைத்து கொண்டே இருந்தால் அது நம்மை கடிக்காது. வெறும் வாய் பேச்சில் வீரர்கள், பெரிதாக ஏதும் செய்ய மாட்டார்கள்.உண்மையான விளக்கம்:குழைக்கிற நாய் கடிக்காது. நம்மிடம் பாசமாய் குழைந்து காலை நக்கும் நாய் நம்மை கடிக்காது. நம் மீது பாசம் உள்ளவர்கள் நமக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்பது தான் சரியான அர்த்தம்.
ஆமை புகுந்த வீடு விளங்காது பொருள்:வீட்டுக்குள் ஆமை புகுந்தால் வீட்டில் நல்லது நடக்காது.கல்லாமை, இல்லாமை, முயலாமை, அறியாமை, பொறாமை முதலியவை வீட்டில் புகுந்தால் நல்லது நடக்காது என்பதற்காக சொன்னார்கள்.
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்.சொல்லப்படும் பொருள்:நல்லவனுக்கு ஒரு காலம் வந்தால், தீயவனுக்கு ஒரு காலம் வரும். வலியவனுக்கு ஒரு காலம் வந்தால், எளியவனுக்கு ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள். உண்மையான விளக்கம்:'ஆ நெய்'- பசுவின் நெய் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் சத்து சேர்ந்து பருமனாக மாறமுடியும். அதே போல 'பூ நெய்' - பூவிலுள்ள தேனை சாப்பிட்டு வந்தால் உடலின் எடை குறையும்.
கோல் ஆட குரங்கு ஆடும்சொல்லப்படும் பொருள்:குரங்காட்டி ஆடு என்று சொன்னால் குரங்கு ஆடாது. கோலை எடுத்து மிரட்டினால் தான் ஆடும்.உண்மையான விளக்கம்என்னதான் சிறு பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை சொல்லி கொடுத்தாலும், கண்டித்து சொன்னாலொழிய மனதில் பதியாது.
பெண் புத்தி பின் புத்தி.சொல்லப்படும் பொருள்:பெண்கள் எந்த ஒரு செயலையும் முன் யோசனை இல்லாமல் செய்து விடுவார்கள். அதற்கு பின் வருத்தப்படுவார்கள்.உண்மையான விளக்கம்:உங்கள் எந்த ஒரு முடிவாயினும், செயலாயினும் பின் விளைவுகளை யோசித்து அதற்கு ஏற்றார் போல முடிவு எடுப்பார்கள் என்பதே சரியான பொருள்.நாம் அதையே தலைகீழாக புரிந்து கொண்டு சொல்கிறோம்.
சொல்லப்படும் பொருள்:கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.உண்மையான விளக்கம்:கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.