25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 07, 2026

விமான டயர்கள் ஏன் வெடிப்பதில்லை தெரியுமா?

மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தரை இறங்கும் போதும், கடுமையான உராய்வு ஏற்படும் சூழலிலும் விமான டயர்கள் வெடிப்பதில்லை. இதற்குக் காரணம், அவற்றில் சாதாரண காற்றுக்குப் பதிலாகநைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டிருப்பது தான். வெப்பநிலை மாற்றங்களால் இந்த வாயு விரிவடைவதோ அல்லது சுருங்குவதோ இல்லை. இதனால் டயர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கின்றன.

Jul 07, 2026

கற்பூரவள்ளி செடி குறித்து வெளியான ஆய்வு என்ன சொல்கிறது?.

கற்பூரவள்ளி (Indian Borage) செடியின் சாறு தோல் புற்றுநோய் செல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஆய்வக (லேபரட்டரி) ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன. இருப்பினும், இது மனிதர்களுக்கு சிகிச்சையாக நிரூபிக்கப்பட்டதல்ல. எனவே, புற்றுநோய்க்கு மருத்துவர்களின் ஆலோசனையின்றி எந்த மூலிகையையும் சிகிச்சையாக பயன்படுத்தக் கூடாது.

Jul 07, 2026

இந்தியாவின் இளம் CEO-வாக கவனம் ஈர்க்கும் ஆதித்யன் ராஜேஷ்.

ஆதித்யன் ராஜேஷ் இந்தியாவின் மிக இளைய தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் தனது 9 வயதிலேயே ஒரு செயலியை உருவாக்கினார். 13 வயதில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

Jul 07, 2026

ZOHO வின் 'நாது லா' சர்வர்

மென்பொருள் (SaaS) துறையில் புகழ்பெற்ற ஸோஹோ (Zoho) நிறுவனம், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 'நாது லா' (Nathu La) என்ற நிறுவன-தர (enterprise-grade) தரவு மைய சேவையகத்தை (Data Center Server) உருவாக்கி வன்பொருள் (Hardware) துறையிலும் தடம் பதித்துள்ளது.. இளம் பட்டதாரிகளின் சாதனைஇந்த அதிநவீன சர்வரை உருவாக்கியது சிலிக்கான் வேலி நிபுணர்கள் அல்ல.ஸோஹோ நிறுவனம் SETU (Student Engagement for Transformative Upskilling) என்ற திட்டத்தின் மூலம் நாக்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்களை 5-வது செமஸ்டரிலிருந்தே தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்தது.இந்தக் குழுவின் 90% பேர் கடந்த 5 ஆண்டுகளில் இணைந்த இளம் பட்டதாரிகள். இவர்களின் சராசரி பணி அனுபவம் வெறும் 3-4 ஆண்டுகள் மட்டுமே. சொந்தமாக உருவாக்க வேண்டியதன் அவசியம்.உள்கட்டமைப்புச் செலவு: உலகளவில் சர்வர் உதிரிபாகங்களின் விலை 2025 டிசம்பரை விட 4 மடங்கு உயர்ந்துள்ளது. AI பயன்பாடுகளுக்கான 'இன்ஃபெரன்ஸ்' (Inference) செலவும் அதிகரித்துள்ளது. வன்பொருளை வாடகைக்கு எடுப்பதைத் தவிர்த்து, செலவைக் கட்டுக்குள் வைக்க ஸோஹோ சொந்த சர்வரை உருவாக்கியுள்ளது.இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பு: இந்தியா ஆண்டுக்கு $13 பில்லியனுக்கும் அதிகமான கணினி அமைப்புகளை இறக்குமதி செய்கிறது. அறிவுசார் சொத்துரிமை (IP) மற்றும் வடிவமைப்பு (Design) இந்தியாவிலேயே இருந்தால் மட்டுமே நாட்டின் பணம் வெளியேறுவதைத் தடுக்க முடியும்.. 'நாது லா' சர்வரின் சிறப்பம்சங்கள்மாடுலர் வடிவமைப்பு: ஓப்பன் கம்ப்யூட்டின் 'M-DNO' வடிவ காரணியைக் கொண்டுள்ளதால், Zoho Mail, Zoho Meeting போன்ற பல்வேறு பயன்பாடுகளின் தேவைக்கேற்ப இதன் கட்டமைப்பை மாற்றியமைக்கலாம்.செலவு மற்றும் மின் சேமிப்பு: இந்தத் தனித்துவமான வடிவமைப்பால் மின் நுகர்வு 12% முதல் 18% வரையும், ஒட்டுமொத்தப் பராமரிப்புச் செலவு (TCO) 20% முதல் 30% வரையும் குறைகிறது.வெப்ப மேலாண்மை & காப்புரிமை: இந்த அமைப்பில் குளிரூட்டும் தொழில்நுட்பம் சார்ந்து 5 தனித்துவமான காப்புரிமைகளை ஸோஹோ பெற்றுள்ளது.பாதுகாப்பான மென்பொருள் அடுக்கு: வெளிநாட்டு நிறுவனங்களின் ரகசியக் குறியீடுகளுக்குப் பதிலாக, OpenBMC போன்ற திறந்த மூல (Open-source) தரநிலைகளைப் பயன்படுத்தி, தணிக்கை செய்யக்கூடிய முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.எதிர்காலத் திட்டம்.இந்த சர்வர் இன்டெல் நிறுவனத்தின் 6-வது தலைமுறை சியோன் (Xeon) செயலிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.தற்போது இந்தியாவில் உள்ள தரவு மையங்களில் சில நூறு சர்வர்கள் பயன்பாட்டில் உள்ளன. 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2,000 'நாது லா' சர்வர்களை நிறுவ ஸோஹோ திட்டமிட்டுள்ளது. உடனடி வணிக விற்பனையில் இறங்காமல், உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதே தற்போதைய நோக்கம்.: AI தொழில்நுட்பங்கள் பெருகி வரும் இக்காலகட்டத்திலும், வன்பொருள் போன்ற 'டீப்-டெக்' (Deep-tech) துறைகளில் மனித உழைப்பும், சரியான வழிகாட்டுதலும், புதியவற்றைத் தேடிக் கற்கும் ஆர்வமுமே உண்மையான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு 'நாது லா' ஒரு சிறந்த சான்றாகும்.

Jul 06, 2026

40 வயதிற்குள் நிதி ரீதியாக தயார் ஆக வேண்டுமா?

40 வயதை எட்டும் முன் பலரும் கவனிக்க வேண்டிய நிதி அம்சங்கள் குறித்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். சொந்த வீடு அல்லது நிலம் போன்ற நிலையான சொத்து, நல்ல கிரெடிட் ஸ்கோர், கூடுதல் வருமானம், முதலீடுகள், டெர்ம் மற்றும் மருத்துவக் காப்பீடு, மேலும் குறைந்தது 6–12 மாத செலவுகளுக்கான அவசர நிதி ஆகியவை நீண்டகால நிதி பாதுகாப்புக்கு உதவும் என ஆலோசிக்கப்படுகிறது.

Jul 06, 2026

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் செயல்பாடு தொடக்கம்.

ஆந்திரப் பிரதேசத்தின் சுவர்ணகிரியில் இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. முதல் முழு செயல்பாட்டு ஆண்டில் சுமார் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆண்டுகளில் இதை 900 கிலோ முதல் ஒரு டன் வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Jul 06, 2026

திருப்பதி கோவிலுக்கு அசோக் லேலண்ட் லாரி நன்கொடை!

அசோக் லேலண்ட் என்ற ஒரு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம், திருப்பதி கோவிலுக்கு ரூ.31 லட்சம் மதிப்புள்ள ஒரு லாரியை தினசரி நிர்வாக மற்றும் போக்குவரத்து பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளது.

Jul 04, 2026

கேரள கோயில்களுக்கு ஆனந்த் அம்பானியின் ரூ.22.55 கோடி நன்கொடை. திருமலை தேவஸ்தானத்துக்கும் ஆனந்த் அம்பானியின் முக்கிய பங்களிப்பு.

ரிலையன்ஸ் குழும இயக்குநர் ஆனந்த் அம்பானி, கேரளாவின் ஒன்பது வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.22.55 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.இதில், ராஜராஜேஸ்வரம் கோயிலுக்கு ரூ.12 கோடியும், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு ரூ.6 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 கோயில்களுக்கு மொத்தம் ரூ.4.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 மின்சார பேருந்துகளை நன்கொடையாக வழங்க ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளார். மேலும், 50 பேருந்து ஓட்டுநர்களின் ஊதியத்துக்கு நிதியுதவி அளிப்பதுடன், ரிலையன்ஸ் நிறுவனம் மின்னேற்றும் (Charging) நிலையங்களையும் அமைக்க உள்ளது.அதோடு, குஜராத்தில் செயல்பட்டு வரும் 'வந்தாரா' திட்டத்தைப் போல, திருமலை தேவஸ்தான கோசாலையை நவீனமயமாக்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்

Jul 04, 2026

உலகத் தரத்திற்கு மாறுமா திருச்சி விமான நிலையம்?

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, அங்கு சிப்காட் அமைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால், தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பப்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தை அடுத்த கட்டத்திற்குத் தரம் உயர்த்தி, அதன் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிக எளிதாக அணுகக்கூடிய ஒரே விமான நிலையம் திருச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது

Jul 04, 2026

உலகின் சிறந்த டீ:இந்தியாவின் மசாலா டீ முதலிடம்!

TasteAtlas வெளியிட்ட உலகின் டாப் 100 டீக்களின் பட்டியலில் இந்தியாவின் மசாலா டீ முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மற்ற தேநீர் வகைகளான டார்ஜிலிங் டீ 6வது இடம், அசாம் டீ 13வது இடம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா டீ மற்றும் ஜம்மு காஷ்மீரின் இளஞ்சிவப்பு நிற நான் சாய் (Noon Chai) ஆகியவையும் முதல் 50 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 130 131

AD's