சுரைக்காயை வளர்க்க, நல்ல வடிகால் வசதியுடன் கூடிய கரிமச்சத்து நிறைந்த மண்ணைத் தேர்ந்தெடுக்கவும். விதை நேரடியாகவோ அல்லது நாற்றங்காலில் வளர்த்தும் நடவு செய்யலாம். கொடி வளர்வதற்கு ஏற்ற பந்தல் அமைக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் ஊற்றி, ஊட்டச்சத்துக்களை வழங்கி, பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து செடிகளைக் காக்க வேண்டும்.சுரைக்காய் வளர்ப்பதற்கு, நன்கு வடிகால் வசதியுடைய, கரிமச்சத்து நிறைந்த மணல் கலந்த களிமண் ஏற்றது.மண்ணின்pH அளவு6.0 முதல்6.7 வரை இருப்பது நல்லது.விதைப்பதற்கு முன், நிலத்தை நன்கு உழுது, களைகளை நீக்கி, மக்கிய தொழு உரத்தைச் சேர்க்கவும்.விதைகளை விதைப்பதற்கு முன், விதைகளை வெதுவெதுப்பான நீரில் சில மணி நேரம் ஊறவைத்து, பின் நடவு செய்யவும்.இது முளைப்புத் திறனை அதிகரிக்கும்.சுரைக்காய் விதைகளை நேரடியாக நிலத்தில் அல்லது நாற்றங்காலில் நடலாம்.நேரடியாக நடவு செய்யும்போது,2/3 விதைகளை ஒரு குழியில்1,2 அங்குல ஆழத்தில் நடவும்.குழிகளுக்கு இடையே4/5 அடி இடைவெளி இருக்க வேண்டும்.நாற்றங்காலில் விதைகளை விதைத்து,2,3 இலைகள் வந்ததும், நிலத்தில் நடவு செய்யலாம்.நடவு செய்யும்போது,செடிகளுக்கு இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.சுரைக்காய் ஒரு கொடி வகைத் தாவரம் என்பதால், அது படர்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க வேண்டும்.பந்தல் அமைக்க, மூங்கில் அல்லது கம்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி, உயரமான பந்தல் அமைக்கலாம்.பந்தல் அமைக்கும் போது, செடிகள் நன்கு காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.சுரைக்காய் செடிக்கு போதுமான அளவு தண்ணீர் தேவை.குறிப்பாக, விதைத்த பிறகு, பூக்கும் தருவாயிலும், காய் பிடிக்கும் தருவாயிலும் போதுமான அளவு தண்ணீர் ஊற்றவும்.மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, நீர்ப்பாசனம் செய்யவும்.சுரைக்காய் செடிக்கு, தொழு உரம், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்.அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைப் பயன்படுத்தலாம்.தேவைக்கேற்ப வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு போன்ற உரங்களையும் பயன்படுத்தலாம்.சுரைக்காய் செடிகளைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.வேப்ப எண்ணெய், பூண்டு கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.நோய் தாக்கிய செடிகளை அவ்வப்போது அகற்றி விடவும்.சுரைக்காய் காய்கள் இளம் பச்சை நிறத்தில் இருக்கும்போது அறுவடைக்குத் தயாராகும்.காய்களின் அளவு மற்றும் தோலின் நிறத்தை வைத்து, அறுவடைக்கான சரியான நேரத்தைத் தீர்மானிக்கவும். குறிப்பு: சுரைக்காய் வளர்ப்பு முறையில், காலநிலை, மண்வளம் மற்றும் பராமரிப்பு முறைகள் ஆகியவற்றைப் பொறுத்து, மகசூல் மாறுபடும்.
தமிழ்நாட்டில் நெல் முப்போகம் விளைந்த காலங்கள் உண்டு. அந்த காலகட்டத்தில் உரங்கள், பூச்சி மருந்துகள் எதுவும் இல்லை. விவசாயிகள் தங்கள் நிலத்தில் நூற்றுக்கணக்கான மாடுகளை கிடை அமர்த்தி, அந்த மாடுகள் இடும் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி நிலத்தை வளமாக்கி, இயற்கை முறையில் பயிர்களை விளைவித்தனர். பொதுவாக, வீட்டுக்கு வீடு மாடுகளை வளர்க்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. மாடுகளை வளர்க்கும் வீடுகளை தேடி கிடை மாடு மேய்ப்பவர் கள் வருவார்கள். அப்போது, பால் தரும் நாட்டு மாட்டு பசுக்களை மட்டும் வைத்து கொண்டு, வீட்டில் இருக்கும் காளை மாடுகள் மற்றும் இளங்கன்றுகளை அவர்களிடம் மேய்ச்சலுக்கு கொடுத்து விடுவது வழக்கம்.இந்த மாடுகளை பகல் முழுவதும் மேய விட்டு இரவு நேரத்தில் பயிர் விளையும் நிலத்தில் ஓய்வு எடுக்க விடுவார்கள். அந்த மாடுகள் கழிக்கும் சிறுநீர், சாணம் ஆகியவற்றால் வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைத்து விடும். இதனால் மண்ணின் தரம் உயருகிறது. அவர்கள் கிடைமாடுகளை அமர்த்தி உரம் இட்டதற்கு ஈடாக நிலத்தின் உரிமையாளர்கள் பணம் அல்லது நெல் கொடுப்பது உண்டு. நிலத்தில் ஒரு முறை கிடை போட்டால் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பயிர் செழித்து வளரும் என கூறுகின்றனர்.
கத்தரி செடி வளர்ப்பதற்கு விதை நேர்த்தி, நிலம் தயாரித்தல், நாற்றங்கால் அமைத்தல், நாற்றுகளை நடவு செய்தல், நீர் ஊற்றுதல், உரமிடுதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை போன்றவற்றை பார்க்கலாம்.விதைகளை விதைப்பதற்கு முன், விதைகளை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.பின்னர், விதைகளை ஒரு துணியில் கட்டி, நிழலில் உலர்த்தவும்.விதைகளை விதைப்பதற்கு முன், சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிர் உரங்களால் விதை நேர்த்தி செய்யவும்.கத்தரி செடிக்கு நன்கு வடிகால் வசதியுள்ள நிலம் தேவை.நிலத்தை உழுது, களைகளை நீக்கி, நன்கு மக்கிய தொழு உரம் அல்லது இயற்கை உரம் இடவும்.நிலத்தில் உள்ள களிமண் தன்மையை குறைக்க, மணல் கலக்கவும். ஒரு சிறிய நிலப்பரப்பில், நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மணல் கலந்த மண்ணை நிரப்பி, நாற்றங்கால் அமைக்கவும்.விதைகளை1,2 செ.மீ ஆழத்தில் விதைக்கவும்.விதைகளை விதைத்த பிறகு, லேசாக தண்ணீர் ஊற்றி, நிழலில் வைக்கவும்.நாற்றுகள்4,5 இலைகள் வந்தவுடன், நடவு செய்ய தயாராகிவிடும். நடவு செய்வதற்கு முன், நிலத்தை நன்கு உழுது, பார்கள் அமைக்கவும்.பார்களில்,60 செ.மீ இடைவெளியில் செடிகளை நடவும்.நடவு செய்தவுடன், நன்கு தண்ணீர் ஊற்றவும்.கத்தரி செடிக்கு வாரம் இருமுறை தண்ணீர் ஊற்றவும்.மழைக்காலங்களில், நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.செடியின் வேர் அழுகல் நோயைத் தடுக்க, நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்தவும்.நடவு செய்த15 நாட்களுக்குப் பிறகு, தழைச்சத்து நிறைந்த உரங்களை இடவும்.பூக்கள் மற்றும் காய்கள் உருவாகும் போது, சாம்பல் சத்து நிறைந்த உரங்களை இடவும்.இயற்கை உரங்களான மண்புழு உரம், பஞ்சகவ்யா போன்றவற்றை பயன்படுத்தலாம்.கத்தரி செடியில் இலைப்புழு, வெள்ளை ஈ, காய் துளைப்பான் போன்ற பூச்சிகள் தாக்கலாம்.இலைப்புழுக்களை கையால் அப்புறப்படுத்தலாம் அல்லது வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த, மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை வைக்கலாம்.காய் துளைப்பானைத் தடுக்க, வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தலாம்.கத்தரி செடியில் வாடல் நோய், சாம்பல் நோய் போன்ற நோய்கள் வரலாம்.வாடல் நோயைத் தடுக்க, வடிகால் வசதியை மேம்படுத்தவும்.சாம்பல் நோயைத் தடுக்க, கந்தக பவுடர் தெளிக்கலாம். கத்தரி செடிகள் நடவு செய்த70,80 நாட்களில் காய்க்கத் தொடங்கும்.காய்களின் நிறம் மற்றும் அளவுக்கேற்ப, அறுவடை செய்யலாம்.கத்தரி செடிகளை தொடர்ந்து பராமரித்து வந்தால், 3-4 மாதங்கள் வரை காய்களை அறுவடை செய்யலாம்.கூடுதல் குறிப்புகள்:கத்தரி செடிகளை நடும் போது, சூரிய ஒளி நன்கு கிடைக்கும் இடத்தில் நடவும்.களைகளை அவ்வப்போது அகற்றிவிடவும். காய்களை அடிக்கடி அறுவடை செய்வதன் மூலம், செடிகள் மேலும் காய்க்கும்.
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்காக இந்த பூமிப்பந்தின் நிலப்பரப்பில் இருந்த,பசுமையான மரங்களில்46 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரங்கள் நிழல் மட்டும் தரவில்லை, மாறாக மரங்கள் காற்றை சுத்திகரித்து, காலநிலை மாற் றத்தை குறைக்க போராடுகின்றன. அதாவது, காடுகளின் மரங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் கார் பன் என்ற கரியமில வாயுவை உறிஞ்சி, மனிதன் சுவாசிக்க தூய் மையான பிராண வாயு என்னும் ஆக்சிஜனை தருகின்றன. மனிதன் கரியமிலவாயுகலந்த காற்றை சுவா சித்தால் மூச்சுத்திணறல் முதற ஏற்படும் ்றுநோய்வரை ஏற்படும் எனமருத் துவ ஆய்வுகள் கூறுகின்றன.பூமியிலஇருக்கும் மரங்கள் சுற்றுச்சூழல் கரியமில வாயுவின் அளவில் 30 சதவீதம் அளவுக்கு உறிஞ்சி, காற் றில் கலந்திருக்கும் மாசுவை கட் டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறு கின்றன. மரங்களின் எண்ணிக் கையை அதிகரிக்கும்போது சுற்றுச் சூழலில் இருக்கும் பெருமளவு கரியமில வாயுவை மரங்கள் உறிஞ்சி சுத்தப்படுத்திவிடும். இத னால், மனிதன் தூய்மையான பிராண வாயுவை சுவாசிக்க முடி யும். பூமியில் உள்ள அனைத்து தாவரங்கள். மற்றும் விலங்குகளில் 50 சதவீதம் காடுகளில் உள்ளன.மரங்கள் ட்டப்பட்டு காடுகளி பரப்பளவுகுறைந்து போனால் மனித வாழ்க்கை பல்வேறு சிக்கல்களை சந்திக்கும். இதனை உணர்ந்த பல் வேறு நாடுகளும் தற்போது மரங் களை நகரம், கிராமம் என்ற பாகு பாடு இல்லாமல் எங்கும் வளர்ப்பதில் முனைப்புடன் இறங்கி உள்ளன .
தாவரங்கள் சூரிய ஒளியில் இருந்து உணவை தயாரித்து கொள்கின்றன. ஆனால், சில வகை தாவரங்கள் பூச்சிகள், சிறிய இந்த வகை தாவரங்கள் கார்னிவோர்ஸ் அல்லது இறைச்சி உண் மணிகள் என்று அழைக்கப்படுகின்றன.இந்த அசைவ தாவரங்களானது, பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளில் கிடைக்கும் சுவையான ஊட்டச்சத்துக்களை உண்பதற்காக மிகவும் தந்திரமாக அவற்றை பிடித்து விடுகின்றன.தாவரவியலாளர்கள் ஆராய்ச்சியில் சுமார் 630 வகையான இறைச்சி உண்ணி தாவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.இதில், பெரும்பாலானவை பூச்சிகள், மீன்கள், கொசு லார்வாச் கள் மற்றும் சிறிய மீன்களை உண்கின்றன. ஆனால், பெரிய அளவில் காணப்படும் தாவரங்களானது பாம்புகள் போன்ற ஊர்வன எலிகள் போன்ற உயிரினங்களை பிடித்து இறுக்கி, அவற்றை ஜீரணிக்கும் திறன் கொண்டவை.இயல்பான தாவரங்கள் சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் எல்லாம் வளரக்கூடியவை. இறைச்சி உண்ணி தாவரங்களின் வாழ்விடங்கள் என்பது அதன் உணவுகள் கிடைக்கும் சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், நீர்வழிகள், காடுகள் மற்றும் மணல் சார்ந்த இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே வளர்கின்றன. அண்டார்டிகா தவிர மற்ற கண்டங்களில் இறைச்சி உண்ணி தாவரங்கள் காணப்படுகின்றன.இவ்வகைதாவரங்கள், தமக்கான இரையை பொறிகளில் இழுக்க அதிக மணம் கொண்ட ஒரு வகை தேனை உற்பத்தி செய்கின்றன மேலும், இந்த தாவரங்கள் தன் இலைகளை பூக்கள் போன்ற வடி விலும் நிறத்திலும் மாற்றி அமைக்கின்றன.இலையின் உள் நுனியில் வழுக்கும் திரவமும் காணப்படும். இதனை பூக்கள் என்று கருதி வரும் வண்டுகள், பூச்சிகள் இந்த இ லைகளின் உள்ளே வந்து சிக்கி மடிந்து போகின்றன. இயற்கையின் மர்மங்களில் இறைச்சி உண்ணி தாவரங்கள் அதிசயிக்கத் தக்க ஒன்றாகும்.
கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி, புங்கன், நாவல், சவுக்கு ,வேம்பு, வாகைவண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு, மூங்கில், வேம்பு ,கருவேல் ,சவுண்டல் புளிகளர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல், வேம்பு,புளி, பூவரசு ,வாகைஉவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு, புங்கன், இலவம், புளி, வேம்புசதுப்பு நிலம்,ஈரம் அதிகம் உள்ள நிலம்- பெரு மூங்கில், நீர் மருது, நாவல், இலுப்பை புங்கன்வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள்-, ஆயிலை, பனை, வேம்பு ,குடைவேல் ,செஞ்சந்தனம்அமில நிலம் : குமிழ், சில்வர் ஓக் சுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு, புங்கன் புளி வெள்வேள் சுபாபுல்குறைந்த அழமான மண் : ஆயிலை, ஆச்சா, வேம்பு, புளி, வாகை பனைகளிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் : வாகை ,புளி ,வேம்பு, புங்கன், சுபாபுல் ,நெல்லி ,கரிமருது, கருவேல்.
ஆடி, மாசி ஆகியபருவகாலங்கள் உளுந்துசாகுபடிக்கு ஏற்றபருவகாலங்கள் ஆகும்.வெப்பம் மற்றும் மிதவெப்பமண்டலங்களில் உளுந்துபயிர் அதிகமாகசாகுபடி செய்யப்படுகிறது.நல்ல வடிகால் வசதிகொண்ட வளமானமண் உளுந்துசாகுபடிக்கு ஏற்றது. அதேபோல் உளுந்துஎல்லா வகைமண்ணிலும் சாகுபடிசெய்தாலும் வண்டல்மண், உளுந்துசாகுபடிக்கு மிகவும்சிறந்தது.டிஎம்வி 1, டி 9 மற்றும்கோ9 ஆகியஇரகங்கள் உளுந்துசாகுபடிக்கு மிகவும்ஏற்ற இரகங்கள்ஆகும்.ஒரு ஏக்கருக்கு8 கிலோவிதைகள் உளுந்துசாகுபடிக்கு போதுமானது.ஆறிய அரிசி வடிகஞ்சியுடன்200 கிராம் அளவுஅடுப்பு சாம்பலைநன்றாக கலந்துஇவற்றை8 கிலோவிதைகளுடன் கலந்துகொள்ளனும்.உயிர் உரவிதை, நேர்த்திசெய்யரைசோபியம்200 கிராம்,பாஸ்போபாக்டிரியா200 கிராம் ஆகியவற்றைஆறிய வடிகஞ்சியில்கலந்து விதைநேர்த்தி செய்து,நிழலில் உலர்த்திவிதை நேர்த்திசெய்யவேண்டும்.இரண்டு முதல் மூன்றுமுறை நிலத்தைபுழுதிப்பட உழுதுநிலம் தயார்செய்ய வேண்டும்.செடிக்குச் செடி ஒருசெ.மிஇடைவெளியும், வரிசைக்குவரிசை 10 செ.மி இடைவெளியும்விட வேண்டும்.உளுந்து சாகுபடி: விதைப்பதற்குமுன் அடியுரமாகமானாவாரிப் பயிராகஇருந்தால் ஏக்கருக்கு12.5 கிலோ தழைச்சத்து,25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல்சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்துஇடவேண்டும். இறவைப்பயிராக இருந்தால்ஏக்கருக்கு 25 கிலோதழைச்சத்து, 50 கிலோமணிச்சத்து, 50 கிலோசாம்பல் சத்துமற்றும் 20 கிலோகந்தகச்சத்து இடவேண்டும்.மானாவாரி மற்றும் இறவைப்பயிர்களுக்கு டைஅம்மோனியம் பாஸ்பேட்2 சதவீதம் அல்லதுயூரியா2 சதவீதம்பூக்கும் தருணத்திலும்பின்பு15 நாள்கழித்தும் தெளிக்கவேண்டும்.உயிர் உரமாக ரைசோபியம்2 கிலோ, பாஸ்போபாக்டீரிய2 கிலோ ஆகியஉயிர் உரத்துடன்,50 கிலோ ஈரப்பதம்உள்ள மக்கியதொழு உரத்துடன்கலந்து அடியுரமாகஇடவேண்டும்.நடவு செய்த15ம்நாள் ஒருமுறையும், பின்பு30ம் நாள்ஒரு முறையும்களை நிர்வாகம்கண்டிப்பாக செய்யவேண்டும். பயிர்சாகுபடியில் சரியானதருணத்தில் களைநிர்வாகம் செய்யாமல்இருந்தால், கண்டிப்பாகபயிர் வளர்ச்சிபாதிக்கப்பட்டு மகசூல்குறைந்து விடும். எனவே சரியானதருணத்தில் களைநிர்வாகம் செய்யவேண்டியது மிகவும்அவசியம்.விதை முளைக்கும் பருவம்,பூ பூக்கும்பருவம், காய்வளர்ச்சி பருவம்ஆகிய பருவங்களில்கண்டிப்பாக பயிர்களுக்குநீர் நிர்வாகம்செய்ய வேண்டியதுஅவசியம்.முதிர்ந்த காய்களைப் பறித்துஉலர்த்த வேண்டும்.அறுவடை செய்யும்போதுபயிர்களை வேரோடுபிடுங்க வேண்டும்.இல்லையெனில் முழுதாவரத்தையும் வெட்டிஎடுக்க வேண்டும்.பின்னர் குவித்துவைத்து உலர்த்திபயிர்களை பிரிக்கவேண்டும்.
2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியைப் பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது.சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில், இந்தியாவுக்கு 11ஆவது இடம் அளித்திருந்தது.நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி. இந்தியத் துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாஸ்மதி அரிசி ரகங்கள் பயிரிடப்படுகிறது.பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுக்கலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1.வேளாண்மைத் திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய - www.tnagrisnet.gov.in2.தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்கள் அறிய - www.tnau.ac.in3.தோட்டக்கலை பயிர்கள், திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய - www.tnhorticulture.tn.gov.in4. விதைகள் தொடர்பான தகவல்கள் அறிய - www.seedtamilnadu.com5. வேளாண் எந்திரங்கள் தொடர்பான தகவல்கள் அறிய - www.aed.tn.gov.in6 வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள- www.13fpedia.com7 அங்ககச் சான்று தொடர்பான தகவல்கள் அறிய - www.tnocd.net.
ரோஜா வகைகளில் பன்னீர் ரோஜா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனுடைய மணமும், குணமும் விசேஷமான தன்மை உள்ளது. பன்னீர் ரோஜாவை கொண்டு பல்வேறு வாசனை திவிரயங்கள் தயார் செய்யப்படுகின்றன. பன்னீர் பல மருத்துவ விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பன்னீர் ரோஜா பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சிபடுத்துவதாக அமைந்திருக்கிறது.நாம் நர்சரிகளில் வாங்கும் பன்னீர் ரோஜா வாங்கிய புதிதில் பெரிய பெரிய மொட்டுக்களும், நிறைய பூக்களும் பூத்திருக்கும். ஆனால் வீட்டிற்கு வாங்கி வந்தவுடன் பார்த்தால் புதிதாக மொட்டுக்களும் நிறைய வைப்பதில்லை. நர்சரிகளில் செயற்கையாக கொடுக்கப்படும் உரங்களினால் செடிகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் இருக்கின்றன. அதை நாம் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கும் பொழுது அந்த அளவிற்கு நிறைய மொட்டுக்கள் வைப்பதில்லை. இதற்கு இரண்டு வகையான டிப்ஸ்கள் உள்ளன. அதை சரியாக செய்து வந்தாலே ஒவ்வொரு கிளையிலும் அதிகம் மொட்டுக்கள் வைக்கத் துவங்கி விடும். செடி முழுவதும் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்கும்பன்னீர் ரோஜா மட்டுமல்ல எந்த வகையான ரோஜா செடிகளுக்கும் இந்த பராமரிப்பை கட்டாயம் செய்ய வேண்டும். ஒருமுறை மொட்டுக்கள் வைத்த கிளையில் திரும்பவும் மொட்டுகள் வரவில்லை என்றால் அந்த கிளையை வெட்டி விட வேண்டும். அந்தக் கிளையின் அடிபாகத்தில் இலைகள் துளிர்க்காது. இதை வைத்தே அந்த கிளையை தேவையில்லாத கிளை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.அந்தக் கிளையை மட்டும் முக்கால் பாகத்தில் வெட்டிவிட்டு கால் பாகத்தை அப்படியே விட்டு விடுங்கள். அதிலிருந்து புதிய கிளை பச்சையாக மீண்டும் முளைக்கத் தொடங்கிவிடும். புதியதாக வரும் கிளையில் நிறைய மொட்டுக்கள் பூக்கும். வாரம் ஒரு முறை இதற்கு ஊட்டச் சத்தான உரத்தை நாம் கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்று. பன்னீர் ரோஜா செடிக்கு நாம் நர்சரிகளில் காசு கொடுத்து உரத்தை வாங்கி போடுவதை விட வீட்டிலேயே வேண்டாம் என்று தூக்கி எறியும் சில பொருட்களை வைத்து உரம் கொடுத்தால் நன்றாக செழித்து வளரும்.அன்றாடம் சமையல் செய்யும் பொழுது கிடைக்கும் காய்கறிகளுடைய தோல் மற்றும் பழங்களின் தோல் இவைகளில் இருக்கும் அதிக சத்துக்கள் பன்னீர் ரோஜா செடி சிறப்பாக வளர உதவியாக இருக்கும். வெங்காய தோல், பூண்டு தோல், பழங்களின் தோல்கள் இவற்றை தனித்தனியாக சேகரித்துவாரம் ஒருமுறை உங்களுடைய பன்னீர் ரோஜா செடி வைத்திருக்கும் தொட்டியில் வேர் பகுதி அடி படாதவாறு ஓரங்களில் பள்ளம் தோண்டி சேகரித்த தோல்களைப் போட்டு மண்ணை மூடி வைத்து விடவும். மண்ணைத் தோண்டும் போது உள்ளே வேர்ப்பகுதி அடிபட்டால் செடி காய்ந்து போய் விடும். ஓரிரு நாட்களில் நீங்கள் வைத்த தோல் கழிவுகள் உரமாகி விடும். இதனை வாரம் ஒரு முறை செய்ய செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். இந்த இரண்டு வேலைகளையும் சரியாக செய்து விட்டால் போதும். புதியதாக முளைக்கும் ஒரே கிளையில் 10 மொட்டுக்கள் கூட கொத்து கொத்தாக விரைவிலேயே விட்டுவிடும். சிறிய செடியாக இருந்தாலும் நிறைய பூக்கள் கொடுக்கும்.