25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Nov 04, 2025

இந்தியாவின் ஷைபாலி வர்மா உலக கோப்பை (50 ஓவர் ) பைனலில் ஆட்ட நாயகி விருது வென்ற இளம் வீராங்கனை.

உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, இந்திய பி.சி.சி.ஐ கிரிக்கெட் போர்டு சார்பில் ரூ. 51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  உலக கோப்பை (50 ஓவர் ) பைனலில் ஆட்ட நாயகி விருது வென்ற இளம் வீராங்கனையானார் (21 ஆண்டு, 278 நாள்) இந்தியாவின் ஷைபாலி வர்மா.உலக கோப்பை (ஒருநாள் போட்டி ) வென்ற இந்திய கேப்டன்கள் கபில்தேவ் (1983). தோனி (2011). பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2025).

Nov 04, 2025

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் 'நம்பர்-1' .

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், 11500 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து மீண்டும் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்.பிரான்சில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் ஒற்றையர் பைனலில் அசத்திய சின்னர் 6-4, 7-6 என கனடாவின் பெலிக்ஸ் அகுர்- அலியாஸ்சிமியை வீழ்த்தினார்.நடப்பு சீசனில் 5வது பட்டம் வென்ற இவர், ஒட்டுமொத்தமாக 23வதுகோப்பை வென்றார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11250 புள்ளி) 2வது இடத்துக்கும் ,நோவக் செர்பியாவின் ஜோகோவிச் (4580) 5வது இடத்தில் நீடிக்கிறார்.

Nov 03, 2025

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ஜானிஸ் டிஜென்சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்களுக்கான 'டபிள்யு. டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னையில், ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ஜானிஸ் டிஜென், ஜென், 2வது செட்டை 6-3 என  வென்றார்.ஜானிஸ் டிஜென் இரண்டு மணி நேரம் நீடித்த பைனலில் ,6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, டபிள்யு.டி.ஏ., டூர் ஒற்றையரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார்.

Nov 03, 2025

செஸ் உலக கோப்பை 11வது சீசனில்  இந்தியாவின் பிரனேஷ், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

செஸ் உலக கோப்பை 11வது சீசன் கோவாவில் , இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், திவ்யா உள்ளிட்ட 206 பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்தியாவின் பிரனேஷ்,கஜகஸ்தானின் சட்பெக் அக் மெடினோவா மோதினர். முதல் போட்டியில் பிரனேஷ் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் பிரனேஷ், 44வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். முடிவில் பிரனேஷ் 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, அஜர்பெய்ஜானின் அகமது அகமத்ஜடா மற்றொருபோட்டியில் மோதினர். இரண்டு போட்டியிலும் 2.0-0.0 என வென்ற சூர்ய சேகர் 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Nov 03, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடரில் அவனி லெஹரா தங்கம் வென்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் துபாயில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள் ஸ்டேன் டிங் எஸ்.எச். 1' பிரிவில் இந்தியாவின் அவனி லெஹரா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 626.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அவனி, 249.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை  வென்றார்.கலப்பு 50 மீ., 'பிஸ்டல் எஸ்.எச். 1' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின்சந்தீப் குமார் (543.6 புள்ளி), ஆகாஷ் (539.11) முதலிரண்டு இடங்களைபிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் ஆகாஷ், 223.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சந்தீப் (220.5) வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

Nov 03, 2025

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி13 வது சீசனில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை  வென்றது.

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப் பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. முதல் முறையாக நடந்த இந்த சாதனையைஇந்திய ரசிகர்கள் கொண்டாடினர். 13-வது சீசன் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை புறநகரான நவி மும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று  நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதினர் .  திட்ட மிட்டநேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. மழையால் 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரை இறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர்.இந்திய அணி 50 ஓவர்களில் ,7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள்,  வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலக கோப்பையை வென்றது.

Nov 01, 2025

இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது.

பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இந்தியா, இலங்கையில், நவி மும்பையில் நடந்த 2வது அரையிறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127*), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89) கைகொடுக்க, இந்திய அணி (341/5, 48.3 ஓவர்) 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை (338/10, 49.5 ஓவர்) வென்றது.பெண்கள் ஒருநாள் போட்டி அரங்கில் இந்திய அணி,  அதிக ரன்னை 'சேஸ்' செய்து வரலாறு படைத்து,3வது முறையாக (2005, 2017, 2025) பைனலுக்கு முன்னேறியது. நாளை, நவி மும்பையில் நடக்கவுள்ள பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் ஜெமிமா 'மேஜிக்' பேட்டிங் தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய பெண்கள் அணிக்கு, சச்சின், கும்ளே, யுவராஜ், கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Nov 01, 2025

புரோ கபடி லீக்12வது சீசன் தொடரில், சாம்பியன் ஆன, டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலை வாஸ், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. நேற்று, டில்லியில் நடந்த பைனலில் புனே, டில்லி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணியினர், புனே அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் டில்லி அணி 20-14 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட புனே அணிக்கு 14 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் டில்லி  அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2021-22, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.புரோ கபடி சாம்பியன் டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. புனே அணிக்கு ரூ.1.8 கோடி கிடைத்தது.

Nov 01, 2025

இந்தியாவின் உன்னதி ஹூடா 'ஹைலோ' ஓபன் சர்வ தேச பாட்மின்டன் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் .

ஜெர்மனியில் 'ஹைலோ' ஓபன் சர்வ தேச பாட்மின்டன் தொடர் ஜெர்மனியில் ,பெண்கள் ஒற்றையர்காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா ('நம்பர்-34'), தைவானின் ஹிசியாங்கை ('நம்பர்-4) எதிர்கொண்டார். உன்னதி முதல் செட்டை 22-20 என கைப்பற்றினார் .அடுத்த செட்டை 21-13 என வசப்படுத்தி, முடிவில் 22-20, 21-13 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். 

Oct 31, 2025

இந்தியா ஆசிய யூத் விளையாட்டில்  ஒரே நாளில் 21 பதக்கம் வென்றது.

ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமா நகரில் ,பீச் மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 55 கிலோ பிரிவுபைனலில் இந்தியாவின் அஞ்சலி, 2-1 என வியட்நாமின் தோம் தாவோவை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றார்.ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுபாஷ், 2-0 என ஈரானின் அமிராலியை வென்று, தங்கம் வென்றார்.90 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன், 2-1 என ஈரானின் முகமதுமதியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். மற்ற - இந்திய வீரர்கள் ரவிந்தர் (80 கிலோ), சுஜாய் (70 கிலோ) பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.இந்தியாவின் சந்திரிகா (50 கிலோ), பெண்களுக்கான குத்துச்சண்டை பைனலில்  5-0 என உஸ்பெகிஸ்தானின் கும்ரின் சோவை வென்று ,தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் ஆஹானா (50 கிலோ), வடகொரியாவின் ஜோங் ஹயாங்கை வென்று தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் குஷி சந்த் 46கிலோ பிரிவில், 4-1 என ஜின் ஜியுவை (சீனா) வென்று, தங்கம் வென்றார். இதுவரை இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம், என மொத்தம் 47 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது.

1 2 ... 89 90 91 92 93 94 95 ... 170 171

AD's