ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட் கன்) எகிப்தின் கெய்ரோவில் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில்தகுதிச்சுற்றில் ,இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட், மான்யா. அனுஷ்கா. ஸ்ரீவள்ளி உட்பட 22 பேர் பங்கேற்றனர். 'டாப்-8 வீராங்கனைகள், இதில் 578 புள்ளியுடன் 6வது இடம் பெற்ற பிராச்சி உட்பட, ' பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் தகுதிச்சுற்றுடன் திரும்பினர். அடுத்து நடந்த பைனலில் (10.0) பிராச்சி, மொத்தம் 354.6 புள்ளி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். இந்தியாமொத்தம் 9 பதக்கம் வென்று (2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்), பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
31-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி, டெல்லி அணி நேற்றிரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதியது. 'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் அக்ஷர் பட்டேல் பீல்ட்ங் தேர்வு செய்தார். 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக் கெட்டுக்கு 242 ரன்கள் குவித்தது. ஓபன் பேட்டிங் செய்த அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தார்.டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ,மாட்ரிட் ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. பிரெஞ்சு ஓபனுக்கு முன் னோட்டமாக களிமண் தரையில் நடக்கும், இந்தபோட்டியில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண் டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அலியாசிம் (கனடா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டேனில் மெட்விடேவ் (ரஷியா). முசெட்டி (இத்தாலி), கேமரூன் நோரி (இங்கிலாந்து), அலெக்ஸ்டி மினார் (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். 'பை' சலுகை பெற்றுள்ள இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் கால் பதிக்கிறார்கள். காயம் காரணமாக முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோ விச் ஆகியோர் விலகியுள்ளனர். நேற்று இதன் பெண்கள் பிரிவு போட்டி தொடங்கி விட்டது.நடப்பு சாம்பியனான பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினாரைபகினா, அமெரிக்காவின் கோகோ காப், ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக், கனடாவின் விக்டோரியா எம்போகோ, ஒலிம்பிக் சாம்பிய னான சீனாவின் கின்வென் ஜெங், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி, உக்ரைனின் ஸ்விடோலினா போன்ற நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் ஆட உள்ளனர்.மொத்த பரிசுத்தொகை இப் போட்டிக்கு ரூ.90கோடி யாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.11 கோடி பரிசுத்தொகையுடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும்.
'லாரியஸ்' உலக விளையாட்டு விருதுகள் ,ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்று முன் தினம் இரவு இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ,வெகுவிமரிசையாக நடந்தது. கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன், அமெ ரிக்க ஓபன் மற்றும் இந்த ஆண்டு தொடக்கத் தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பட்டங்களை வென்றவரும், உலக தரவரிசையில், 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சிறந்த வீரர் விருதையும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றிய ‘நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) சிறந்த வீராங்கனை விருதையும் பெற்றனர்.சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கடந்த ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற பாரீஸ் செயின்ட் ஜெர் மைன் (பிரான்ஸ்) சிறந்த அணி விருதை வென்றது.
30 - வது லீக் போட்டியில் குஜராத், மும்பை அணிகள் நேற்று ஆமதாபாத்தில் மோதின. டாஸ் ஜெயித்த குஜராத் அணி கேப்டன் சுப்கில் பீல்ட்ங் தேர்வு செய்தார். மும்பை அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு, 199 ரன் எடுத்தது. திலக் வர்மா 101 ரன் எடுத்தார். குஜராத் அணி 15.5 ஓவரில் 100 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ அணிகள் நியூசண்டிகாரில் நேற்றிரவு மோதின . 'டாஸ்' ஜெயித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பீல்ட்ங் தேர்வுசெய்தார். லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு, 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு, 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
28-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணி நேற்று மாலை கொல்கத்தா ஈடன் கார்டனில் மோதின .டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி 19.4 ஓவர் களில் 6 விக்கெட்டுக்கு 161 ரன் கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த ஆர். வைஷாலி ,சைப்ரஸ்நாட்டில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் 8% பபுள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற அவர் ஆண்டின் இறுதியில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூவென் ஜூனுடன் மோத உள்ளார்.இந்த நிலையில் 24 வயதான ஆர். வைஷாலி நேற்று அதிகாலை சென்னை திரும்பி னார். விமான நிலையத்தில் எஸ்.டி.ஏ.டி, மற்றும் செஸ் சங்கம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட் டது. அகில இந்திய செஸ் சம்மேளன தலைமை ஆபரேட்டிங் அதிகாரி ஏ.கே. வர்மா வைஷாலியை நேரில் வர வேற்று கூறுகையில், 'உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு முயற்சிப்போம். இதற்காக முறைப்படி விண்ணப்பிப்போம். இரண்டு இந்தியர்கள் (ஆண்கள் பிரிவில் குகேஷ், பெண்கள் பிரிவில் வைஷாலி) உலக செஸ்சாம்பியன்ஷிப்பில் ஆட இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றார்.
கொல்கட்டா, குஜராத் அணிகள் நேற்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மோதின. கொல்கத்தா அணி கேப்டன் ரகானே, 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணி 20 ஓவரில் 180 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 14 அணிகள் இடையிலான தொடரில் சென்னை நேருஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லியை எதிர்கொண்டது.சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை வென்றது. பாருக் சவுத்ரி (II-வது நிமிடம்) வெற்றிக்கான கோலை அடித் தார்.சென்னை அணிக்கு ,8-வது ஆட்டத்தில் ஆடிய 2-வது வெற்றியாகும்.டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.