ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான 'காந்தாரா சாப்டர் 1' உலகளவில் ரூ.818 கோடி வசூலித்துள்ளது. 2025ல் இந்திய படங்களில் அதிகம் வசூல் செய்ததாக இப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. பட வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி, மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து ஆன் மிக பயணத்தை துவங்கியுள்ளார். தொடர்ந்து நஞ்சனகுடு கண்டேஸ்வரர் கோயில், தக்ஷன காசி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சென்ற ரிஷப், பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றும் தரிசனம் செய்துள்ளார்.
'ஜிடிஎன்' என்ற படம் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்க அவரது ரோலில் நடிக்கும்மாதவனின்தோற்றத்தைவெளியிட்டுள்ளனர்.இந்தலுக்கிற்காகமாதவன்இரண்டரைமணிநேரம் மேக்கப்போட்டுள்ளார் .அடுத்தாண்டு கோடையில் படத்தை ரிலீஸ் 'செய்ய எண்ணி உள்ளனர்.
நடிகர் பிரபாஸ் ,சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ' ஸ்ப்ரிட் ' படத்தில் நடிக்கும் அறிவிப்பு வீடியோ வெளியானது. ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடிக்க, இவருடன் நாயகியாக திரிப்தி டிம்ரி ,வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை காஞ்சனாவும் நடிக்கிறார். இவர் 2017ல் சந்தீப் இயக்கிய 'அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா பாட்டியாக நடித்தார்.
தமிழ் சினிமாவில் அக்.,31ல் "ஆண்பாவம் பொல்லாதது, ஆர்யன், மெஸன்ஜர், பரிசு, ராம் அப்துல்லா ஆண்டனி, தடை அதை உடை, தேசிய தலைவர், வட்டக்கானல்" ஆகிய எட்டு படங்கள் அக்.,31ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைச்சேர்த்தால் இந்தாண்டில் வெளியான படங்கள் எண்ணிக்கை 230 ஆக உயரும்.
''ஹாய்' பட இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆக் ஷன் கதையில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதன் மூலம் ,முதன்முறையாக இவர் விக்ரமுடன் இணைகிறார்.
ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்த 'டீசல்' படம் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ரிலீஸாகிறது. ஹரிஷ் பேசியதாவது, ஆக்ஷன் ரோல் பண்ணியிருக்கேன் .தங்கத்தை விட அதிகமதிப்புமிக்க எரிபொருள் உலகத்திற்கு பின்னால் நடக்கும் கதை, மக்களுக்கு படமாக இருக்கும், என அறிவித்துள்ளனர்.
தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப பில் வெளியான படம் 'சங் கராந்திகி வஸ்துனம்' இந்தாண்டு பொங்கலுக்கு ,இதை ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்க, ஹீரோவாக அக்ஷய் குமாரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.
டிவி சீரியலில் ஹீரோவாக நடித்த சித்து, இப்போது 'தி டார்க் ஹெவன் என்ற படத்தில் ஹீரோவாகிவிட்டார். பாலாஜி இயக்கி உள்ளார். இப்பட விழாவில் பேசிய சித்து, "இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன் கிரைம் திரில்லர் கதை. காட்டுப் பகுதியில் அதிக நாட்கள் படப் பிடிப்பு நடந்தது. தர்ஷிகா ஹீரோயின். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. பாசிடிவ் விஷயங்கள் குறைந்து விட்டது.
முன்னணி இசையமைப்பாளராக தமிழ், தெலுங்கில் இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். தெலுங்கில் வேணு இயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா' என்ற படத்தின் மூலம் இவர் நாயகனாக அறிமுகமாகிறாராம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
நடிகர் எம். கே.தியாகராஜ பாகவதர், பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு பின்னணியில் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'காந்தா' உருவாகி உள்ளது. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளர். தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் நவ.14ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.